காரில் மது பாக்கெட் கடத்தியவர் கைது



தொப்பூர் :தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும், தேர்தல் பறக்கும் படை முதல் குழுவின் தலைவரான வேளாண்மை அலுவலர் தேவி தலைமையில் நேற்று முன்தினம் இரவு, 7;00 மணிக்கு தொப்பூர் சோதனைச்சாவடி அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது, சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த டாடா ஹாரியர் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள், 48, இருந்தது தெரியவந்தது. இதில், காரை ஓட்டிவந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியை சேர்ந்த ரூபேஸ், 26, என்பவரை தொப்பூர் போலீசார் கைது செய்து, மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement