ரூ.9 கோடி தங்க நகைகள் பறிமுதல்
திருவள்ளூர்: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூர் மாவட்டம் லட்சுமாபுரம் அருகில், தேர்தல் பறக்கும் படையினர், சோதனை சாவடி அமைத்து, வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர்.
நேற்று மாலை, சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற 'டாடா சுமோ' காரை நிறுத்தி சோதனையிட்டதில், 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 1 கோடி ரூபாய் மதிப்பிலான, வெள்ளி நகைகள் இருந்தன. விசாரணையில், திருப்பதியில் உள்ள நகை கடைகளுக்கு அவற்றை வினியோகிக்க எடுத்துச் செல்வதாக, காரில் இருந்தோர் கூறினர். ஆனால், அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காமன்வெல்த் ஊழல்; காங்கிரஸ் தலைவர் சிக்கியது இப்படித்தான்!
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
-
தேர்தலுக்கு 10 நாட்கள் தான்; அனல் பறக்கும் கள தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
Advertisement
Advertisement