200 கி.மீ., வேக ரயில்கள் ஐ.சி.எப்., ஆலைக்கு 'ஆர்டர்'
சென்னை; நாட்டிலேயே முதல் முறையாக, மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் செல்லும், இரண்டு புதிய விரைவு ரயில்களை தயாரிக்க, ஐ.சி.எப்., ஆலைக்கு, ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான, ரயில் இன்ஜின், பெட்டி வடிவமைப்பு ஆகியவை, சமீபத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளன.
உத்தரவு இதையடுத்து, இந்த நிதி ஆண்டில், 16 பெட்டிகளைக் கொண்ட, தலா இரண்டு விரைவு ரயில்களை தயாரிக்க, ரயில்வே வாரியம், சென்னையில் உள்ள ஐ.சி.எப்., ஆலைக்கு உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
முக்கிய நகரங்களை இணைக்கும் வழித் தடங்களில், அதிவிரைவு ரயில்களை இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான, கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை -- குஜராத்தின் ஆமதாபாத் இடையே, நாட்டின் முதலாவது புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த தடத்தில் மணிக்கு, 280 கி.மீ., வேகத்தில், ரயில் இயக்கப்பட உள்ளது.
திட்டம் மற்றொரு புதிய திட்டமாக, தற்போதுள்ள வழித்தடங்களில், தேர்வு செய்யும் பாதைகளை மேம்படுத்தி, மணிக்கு 200 கி.மீ., வேகத்தில், அதிவேக ரயில்களை இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதற்காக, மணிக்கு 220 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்ட, இரண்டு ரயில்களை தயாரிக்க, ஐ.சி.எப்., ஆலைக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
சதமடிக்கும் வெயில் மக்கள் பாதிப்பு
-
அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
-
தி.மு.க.,வுக்கு பெண்கள் அமோக ஆதரவு: வால்பாறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
-
பொரியல் தட்டை விலை உயர்வு
-
பைக்கில் சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் தங்க சங்கிலி பறிப்பு
-
மீண்டும் பஸ்கள் இயக்கக் கோரி துடியலுார் ஆர்.டி.ஓ., முற்றுகை