நெல்லுக்கு ஊக்கத்தொகை தர மத்திய அரசு தடையா? ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் நிர்மலா பதிலடி
சென்னை: 'குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத் தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது, எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அதை யாரும் பறிக்கவில்லை' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
தஞ்சையில் நடந்த பிரசார கூட்டத்தில், 'நெல்லுக்கு அளித்து வரும் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதை மறுத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை, தேசிய முன்னுரிமை களுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனை மட்டுமே, அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது.
சுய சார்பு
மத்திய அரசின் இந்த ஆலோசனை, பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசார்பு அடைவதை நோக்கமாக கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான தொலைநோக்கு பார்வை. இதன் வாயிலாக, உள்நாட்டு தேவை அதிகமுள்ள பயிர்களை, விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபம் பெற வழி வகை செய்யப்படும்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது, எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை. தேச நலனில் அக்கறை கொண்டு செயல்படுவதற்கு பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காக திட்டமிட்டு, திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். தேசம் தீர்வுகளை தேடும் போது, தி.மு.க., சர்ச்சைகளை உருவாக்குகிறது.
மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும் போது, தி.மு.க., அதை தேர்தல் அரசியலுக்காக சுரண்ட பார்க்கிறது. அரசியலமைப்பு சட்டப்படி, உயர் பதவியில் இருக்கும் ஒரு முதல்வருக்கு இத்தகைய நடத்தை அழகல்ல. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சோர்வின்றி தொடர்ந்து பணியாற்றும். இத்தகைய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரச்னைகளால், நாங்கள் ஒரு போதும் பின்வாங்க மாட்டோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: மாநில தலைமை செயலர்களுக்கு, ஜன., 9ல் நிதித்துறை செயலர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதம், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஓர் ஆலோசனையே தவிர, அது ஒரு கட்டாய உத்தரவு அல்ல.
விவசாயிகளை ஆதரிப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்கிறது. இருப்பினும், பல மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் சாகுபடி என்பது கோதுமை மற்றும் நெல் பயிரை நோக்கியே அதிகம் உள்ளது.
பரப்பு குறைகிறது
மாநில அரசுகள், இந்த பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் கூடுதல் ஊக்கத்தொகை அறிவிக்கும் போது, அது, அவற்றின் சாகுபடியையே மீண்டும் மீண்டும் ஊக்குவிக்கிறது. இதனால், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் பயிரிடும் பரப்பு குறைகிறது. எனவே, தேச நலன் கருதி, பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவிப்பதன் வாயிலாக, மத்திய அரசு ஒரு பொறுப்பான மற்றும் தொலைநோக்கு பார்வையிலான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
வட மாநிலங்களின் சில பகுதிகளில், கோதுமை மற்றும் பல மாநிலங்களில் நெல் ஆகியவற்றை மட்டுமே பயிரிடும் ஒற்றைப்பயிர் சாகுபடியை தவிர்ப்பதே, இதன் முக்கிய நோக்கம். பயிர் பல்வகைப்படுத்துதல் வாயிலாக, விவசாயிகளின் லாபம் மேலும் அதிகரிக்கும். மாநிலங்கள் தங்கள் விவசாய கொள்கைகளை, விரிவான தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இது, விவசாயிகள், நுகர்வோர் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்மை பயக்கும் ஒரு கூட்டு பொறுப்பாகும். இதை, ஒரு திணிப்பாக சித்தரிக்க முயல்வதோ அல்லது அதன் நோக்கத்தை திட்டமிட்டு தவறாக புரிந்து கொள்வதோ, உண்மைகளை திரித்து கூறுவதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோதுமை உற்பத்தியில் தன்னிறைவடைந்து ஏற்றுமதியில் புதிய சாதனை செய்துள்ளனர் கோதுமை விவசாயிகள். பஞ்சாபில் ஹரியானாவில் கோதுமை வைக்கோலை ஏரிப்பதால் டில்லி வாழத்தகுதியற்ற இடமாகவே மாறி உள்ளது. இருப்பினும் கோதுமைக்கு இன்றும் ஒன்றிய அரசு மானியம் வழங்குகிறது. நெல்லில் தன்னிறைவு அடைந்துள்ளோம், ஏற்றுமதியில் தாய்லாந்து, வியட்நாம் ஆகியவை நம்மை முந்தி உள்ளன. நெல்லின் வைக்கோலை தென்னிந்திய விவசாயிகள் எரித்து சூழலை மாசுபடுத்துவதும் இல்லை. இது தான் உண்மை நிலவரம். பொய்யின் பிறப்பிடம் பாஜக அமைச்சர்கள்.
மத்திய அரசில் இருந்து ஜனவரி 9 அன்று கடிதம் வந்தது. முதல்வராக இருந்துகொண்டு இவர் மூணு மாசமாக என்னபண்ணிக்கொண்டிருந்தார். இதுகுறித்து அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி மத்திய அரசை விமர்சித்தது தீர்மானம் ஏதாவது சட்டசபையில் நிறைவேற்றினாரா ??
பிரதமரை பார்த்து ஏதாவது சொன்னாரா ?? மாநில விவசாய அமைச்சர் மத்திய விவசாய மந்திரியை சென்று பார்த்தாரா ? நிதி அமைச்சரை பார்த்தாரா ? பத்திரிகையில் இதுசம்பந்தமாக பேட்டி கொடுத்து மத்திய அரசை விமர்சித்தாரா ?
அல்லது விவசாயிகள் சங்கத்துடன் பேச்சு ஏதாவது நடத்தினாரா ? ஓட்டுக்காக தேர்தலுக்கு மட்டும் மத்திய அரசை விமர்சித்து பேசினால் போதுமா ? விவசாயிகள் நம்பிவிடுவார்களா ?? ஸ்டாலின் விடுவது எல்லாம் எல்லாம் முதலை கண்ணீர்
உங்கள் பேச்சில் தடுமாற்றம் தெரிகிறது. உங்கள் நோக்கம் பருப்பு, எண்னை வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்றால், நீங்கள் அவற்றுக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்கலாம்...
அதைவிடுத்து, நெல்லுக்கான ஏற்கனவே இருக்கும் ஊக்க தொகையை குறைப்பது சரியான முறையாக தெரியவில்லை.
நெல் விளைச்சல் ஏற்கனவே அதிகம். அநாவசியமாக கொள்முதல் செய்து புழுக்கள் தின்ன விடுவது அல்லது குறைந்த விலைக்கு வெளிச் சந்தையில் விற்பது. இதை அரசு செய்ய வேண்டுமா? நகர் பகுதிகளில் இந்த அரசு அரிசியை இலவசமாக வாங்கி தெருவில் திரியும் மாடுகளுக்கு தீவனமாக போடுகிறார்கள். இதற்காக ஏன் அரசு கிலோவுக்கு 30 ரூபாய் செலவு செய்ய வேண்டும்? ஒரு பருக்கை சோறு கூட சாப்பிடாத பஞ்சாப் ஹரியானா விவசாயிகள் விளைவிக்கும் இரண்டு போக நெல்லையும் வாங்க வேண்டும். அதை மாற்றுவதற்காக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை மோடி அரசே தூக்கி மூலையில் போடும் படி செய்து விட்டார்கள். முக்கியமாக அவர்களை தான் பருப்பு எண்ணெய் வித்துக்களை
பயிரிடும் படி முந்தைய அரசுகளும் கூறின. செய்தால் தானே ஊக்கத் தொகை அதிகரிக்க முடியும்? நெல் கொள்முதல் தொகையில் அந்த மாநில அரசுகள் 9 சதவீதம் வரி விதித்து வருமானம் பார்ப்பதால் அவர்களும் ஒத்துழைப்பதில்லை. ஜனவரி மாதம் வந்த கடிதத்தை இப்போது வெளியிடுவது ஸ்டாலின் செய்யும் அரசியல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மத்திய பாஜக அரசு கடந்த பத்தாண்டுகளில் எந்தப் பிரச்சினைக்காவது தீர்வுகள் கொடுத்தது உண்டா? சர்ச்சைகளை உண்டாக்கி அதில் அரசியல் ஆதாயம் தேடுவது தானே பாஜக வழக்கம்!
நெல்லுக்கு ஊக்கத்தொகை தர மத்திய அரசு மறுத்துவிட்டது என்று பொய் சொன்ன ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
முதல்ல ஸ்டாலினுக்கு எந்தெந்த துறையை மத்திய அரசின் கீழ் வருகின்றது மாநில அரசின் கீழ் வருகின்றது என்பதை தெரியாத ஒரு முதல்வர் ஐந்து ஆண்டு காலத்தை நாற்காலியை தேய்த்து ஓட்டி விட்டாரே தவிர வேறு எதுவும் செய்யவில்லை..
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் போனஸ் நிவாரணம் இவை எல்லாம் யார் கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாத இந்த திருட்டு திமுக 5 ஆண்டுகளை இலவசம் என்ற பெயரிலேயே அளவுக்கு அதிகமாக கடனை வாங்கி இலவசம் கொடுத்து தமிழகம் இப்பொழுது கடனை திருப்பி கட்ட முடியும் இல்லை வட்டியும் செலுத்த வக்கில்லை இதற்கு முழுமுதற் காரணம் ஐந்தாண்டு ஆட்சி செய்த திமுக வே தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இதனால் தான் தஞ்சையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின் நெல்லுக்கு அளித்து வரும் ஊக்கத் தொகையை நிறுத்துமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார் நான் ஒன்னு கேக்குறேன் இந்த கடிதம் உங்களுக்கு வந்தது இல்லை உடனே அதை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும் அப்படி தெரிவிக்காமல் உண்மையை மறைத்து பொய் பேசுவதை யாரும் நம்ப மாட்டார்கள் அதே போல் மத்திய அரசும் உங்களுடைய பொய் பேச்சை பதிலடி கொடுக்காமல் இருக்க மாட்டார்கள்..
அதாவது மத்திய அரசு என்ன சொல்லுகிறது என்றால் மாநில அரசுகள் வழங்கும் ஊக்கை தொகைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனை மட்டுமே அனைத்து மாநிலங்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அதற்கு காரணம் மத்திய அரசால் வழங்கப்படும் நிவாரணங்கள் ஊக்கத்தொகைகள் ஒழுங்காக மக்களிடம் விவசாயிகளிடம் சேர்வதில்லை என்பதுதான் உண்மை அதற்காகத்தான் அப்படி ஒரு அறிக்கையை மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளது இதில் என்ன தவறு.
இது மத்திய அரசின் ஒரு தொலைநோக்கு பார்வை பயிர் மற்றும் பருப்பு வகைகள் எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுய சார்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கபூர்வமான செயல்தான் அது அதற்கு ஸ்டாலின் ஒத்துழைக்காமல் தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அரசு மீது வீண் பழி சுமத்துகிறார் இது அவருடைய அறியாமையே என்று சொல்ல வேண்டும்.
மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு எம்ஜியார் கருணாநிதி பல திட்டங்களை திட்டங்களை பெற்றுத் தந்தனர். இப்போதெல்லாம் INDI கூட்டணி ஆளும் மாநில அரசுகளும் அதே வழியை பின்பற்றுகின்றனர். ஸ்டாலின், மமதா (தனது சுயநல கொள்ளைக்காக ) வீணாக டெல்லி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் மாநில மக்களுக்கே. சொந்த டெல்டா மாவட்டங்களை பின்தங்கிய மாவட்டங்களாக ஆக்கி விட்டு மத்திய அரசின் மீது ஓரவஞ்சனை குற்றச்சாட்டு கூறுவது அநியாயம்.
2014 லேருந்து தீர்வைத் தேடிக்கிட்டிருக்காங்க.
மத்திய காங்கிரஸ் அரசுகளும் சொன்னது தான் இது. ஆனால் முனையவில்லை. அதை வைத்து கொண்டு எந்த எதிர் கட்சியும் அரசியல் செய்யவில்லை. மோடி அரசு 2019லேயே வேளாண் சட்டங்கள் கொண்டு வந்தது இதற்கு தான்.
மூட நம்பிக்கை ஒளித்து மக்கள் நம்பிக்கை வர மாறி எதாவது செய்யுங்கள்
விவசாயிகள் நம்மை விட நன்கு அறிவார்கள் இந்த மண்ணில் என்ன விளையும் என்று மிக நன்றாக அவர்களுக்கு தெரியும் அதனால் அவர்களும் சர்வ சாதாரணமான ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...Jaihind
உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் . ஏன் என்றால் மத்தியில் அதிகார பலத்தை வைத்துக் கொண்டு இந்த ஊழல்வாதிகளை எதுவும் செய்ய முடியாத அரசாங்கம் உள்ளது மத்திய அரசு எனவே நன்றாக வேண்டும் உங்களுக்கு.
வாஷிங் மெஷின் உத்தமர்கள் கட்சி பாஜக. ஊழலின் உறைவிடம் பிஎம் கேர்ஸ் .மேலும்
-
பா.ஜ. வேட்பாளருக்காக வீடு வீடாக பிரசாரம்
-
தமிழகத்தின் உற்பத்தி துறையில் கோவையின் பங்கை 25 சதவீதமாக உயர்த்திக் காட்டுவோம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
-
'மக்கள் திட்டங்களை செயல்படுத்த தவறியவர்கள் அ.தி.மு.க.,வினர்'
-
போதைப் பொருட்கள் இல்லாத சிங்காநல்லுாரே எனது நோக்கம் :உறுதியளிக்கிறார் அ.தி.மு.க.ஜெயராம்
-
சூழ்ச்சி என்றும் வெல்லாது... தர்மம் வெல்லும்: டி.ஆர்.எஸ்.
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு துவங்கியது ஓட்டுப்பதிவு!