மாம்பழம் சின்னத்தை அழித்த தி.மு.க.,வினர் மீது புகார்

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் தொகுதியில் சுவர் விளம்பரமாக வரையப்பட்ட மாம்பழம் சின்னத்தை அழித்த தி.மு.க., நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ம.க., வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு விபரம்:

ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் பாசார், மேலப்பழங்கூர், முட்டியம், மண்டகப்பாடி, பிரிவிடையாம்பட்டு, சிங்காரப்பேட்டை, நுாரோலை, கடுவனுார், மங்கலம், அவிரியூர் ஆகிய கிராமங்களில் சுவரில் வரையப்பட்ட மாம்பழம் சின்னத்தை தி.மு.க., வினர் வெள்ளை நிற பெயிண்டால் அழித்துள்ளனர்.

மேலும், உதயசூரியன் சின்னத்தை வரைந்தால் மட்டுமே ஓட்டுக்கு பணம் தருவோம், இல்லையெனில் பணம் தரமாட்டோம். அரசு மூலம் வரும் நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என கூறி பொதுமக்களை மிரட்டுகின்றனர்.

குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட தி.மு.க., நிர்வாகிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பா.ம.க., ரிஷிவந்தியம் தொகுதி பொறுப்பாளர்கள் தன்ராஜ், வடிவேல், மருத்துவரணி மாநில துணைத்தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் ராஜேஷ், மணி, முன்னாள் மாவட்ட தலைவர் அமுதமொழி உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement