6.5 கிலோ ஹெராயின் பறிமுதல்: 2 பேர் கைது
சண்டிகர்: சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவரை கைது செய்த போலீசார், 6.5 கிலோ ஹெராயின், கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
சர்வதேச போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவரை, படாலா போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6.5 கிலோ ஹெராயின், கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மர்ரும் ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இருவர் மீதும் சிவில் லைன்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடத்தல் கும்பலை சேர்ந்த மற்றவர்கள் குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
-
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்
-
தேர்தல் வாகன சோதனையில் ரொக்கப்பணம் பறிமுதல்
-
ஓடும்போது மயங்கிய டிரைவர் தோட்டத்தில் புகுந்த அரசு பஸ்
Advertisement
Advertisement