ஓவியத்தை பாதுகாக்கும் ஊழியர்கள்

சேலம்: வேளாண் துறை சார்பில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, நவ தானியங்களால் விழிப்புணர்வு ஓவியம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வரையப்பட்டது. அதை, நேற்று முன்தினம் முதல், வரும், 22 வரை மக்கள் பார்வையிடலாம்.

அதே நேரம் நாய்கள் உள்ளிட்ட பிராணிகள், ஓவியத்தை கலைத்து விடுவதை தடுக்க, தினமும் சுழற்சி முறையில், 6 வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள், உதவி மேலாளர்கள் என, 20 பெண்கள் உட்பட, 72 அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து, சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அவர்கள், தொடர்ந்து ஓவியத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement