சிதம்பரம் சர்ச்சில் ஓட்டு சேகரித்த  அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன்

சிதம்பரம்: சிதம்பரம் சர்ச்சில் அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுசேகரித்தார்.

சிதம்பரம் தொகுதியில், அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., கனகசபை நகரில் உள்ள திரு இருதய ஆண்டவர் சர்ச்சில், பங்கு தந்தை ,மரிய ஜோசப் ஜெரால்ட் தலைமையில் நடைப்பெற்ற சிறப்பு பிரார்தனையில் பங்கேற்று, கிருஸ்துவர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் குமார், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் மாரிமுத்து, ஜெ.,பேரவை இணை செயலாளர் சண்முகம், இலக்கிய அணி செயலாளர் கோபி, செல்வம், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவர் வீரமனி, கிள்ளை பேரூராட்சி செயலாளர் தமிழரசன், இளைஞரணி துணை செயலாளர் சங்கர், நிர்வாகிகள் ஏசுரஜ், மணிவண்ணன்,தங்கமான், மணி, கல்யாணம், காதர், சக்திவேல், ராஜி, செழியன், குணசேகரன், பூவராகவன், மாஸ் ஜாகிர், மகளிரணி பானு, விஜயலட்சுமி, பா.ம.க., நகர செயலாளர் கார்த்தி, நிர்வாகிகள் கமல், சுரேஷ், தமிழரசன், திலீப், பழனி, அ.மள.மு.க., நகர செயலாளர் சரவணன், குமார் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement