சூலூரில் ரூ.1.64 லட்சம் பறிமுதல்
சூலூர்;சூலூரில் இரு வேறு இடங்களில், தேர்தல் பறக்கும் படை சோதனையில், ரூ. 1.64 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சூலூர் தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாநில வரி அலுவலர் விஜயகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் அரசூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், மணியகாரன்பாளையத்தை சேர்ந்த சிவசாமி என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல், 1 லட்சத்து, 4 ஆயிரத்து, 700 ரூபாயை காரில் வைத்திருந்தார். அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், பி.டி.ஓ., வெள்ளிங்கிரி தலைமையில் நடத்திய சோதனையில், திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் சரக்கு ஆட்டோவில், 60 ஆயிரம் ரூபாய் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்டது தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட, 1 லட்சத்து, 64 ஆயிரத்து, 700 ரூபாய் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும்
-
பா.ஜ. வேட்பாளருக்காக வீடு வீடாக பிரசாரம்
-
தமிழகத்தின் உற்பத்தி துறையில் கோவையின் பங்கை 25 சதவீதமாக உயர்த்திக் காட்டுவோம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
-
'மக்கள் திட்டங்களை செயல்படுத்த தவறியவர்கள் அ.தி.மு.க.,வினர்'
-
போதைப் பொருட்கள் இல்லாத சிங்காநல்லுாரே எனது நோக்கம் :உறுதியளிக்கிறார் அ.தி.மு.க.ஜெயராம்
-
சூழ்ச்சி என்றும் வெல்லாது... தர்மம் வெல்லும்: டி.ஆர்.எஸ்.
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு துவங்கியது ஓட்டுப்பதிவு!