12 கிலோ கஞ்சா பெரம்பூரில் பறிமுதல்

சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 12 கிலோ கஞ்சாவை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

பெரம்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர், நேற்று காலையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, நடைமேடை 2, 3ல் யாரும் உரிமை கோராத பேக் ஒன்று இருந்தது.

அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 6 லட்சம் ரூபாய். இந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், போதை பொருள் நுண்ணறிவு பிரிவில் ஒப்படைத்தனர்.

Advertisement