100 சதவீத ஓட்டு விழிப்புணர்வு

திருக்கழுக்குன்றம்:கூட்டுறவு துறையினர், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, திருக்கழுக்குன்றத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு துறை சார்பில், திருக்கழுக்குன்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில், செங்கல்பட்டு மண்டல இணை பதிவாளர் மலர்விழி தலைமையில், பொதுவிநியோக திட்ட துணை பதிவாளர் சாவித்திரி உள்ளிட்டோருடன் நடந்த 100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு நிகழ்வில், கடன் சங்க செயலர்கள், ஊழியர்கள் பங்கேற்று, அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஓட்டளிக்க வலியுறுத்தினர்.

Advertisement