கழிவுநீர் கால்வாய் தரைப்பாலம் சேதம்



போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரில், திருப்பத்துார் செல்லும் சாலையில், மாரியம்மன் கோவில் அருகில், குடியிருப்புகளுக்கு செல்லும் தெருவில், கழிவுநீர் செல்லும் கால்வாய் மீது, தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

இது கடந்த, 6 மாதங்களுக்கு முன் சேதமாகி, வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement