வழக்கமான பணிக்கு திரும்பிய போலீசார்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு முடிந்ததையடுத்து வழக்கமான பணிக்கு போலீசார் திரும்பினர்.
புதுச்சேரியில் கடந்த 15ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மறுநாள் 16ம் தேதியே வேட்புமனு தாக்கல் துவங்கியது. இதனால், தேர்தல் அதிகாரிகள் பாதுகாப்பு, பிரசாரம், மனு அலுவலக பாதுகாப்பு, பிரசாரத்துக்கு வந்த வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு என போலீசார் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையடுத்து, போலீஸ்துறை, ஐ.ஆர்.பி.என்., ஊர்க்காவல்படை என அனைத்து பிரிவினரும். களத்தில் இறக்கப்பட்டனர். அவர்களோடு துணை ராணுவப்படையினரும் பணியாற்றினர். போலீஸ் நிலையங்களில் இருந்த போலீசாரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் அங்கு குறைவான போலீசாரே பணியாற்றினர்.
கடந்த 9ம் தேதி தேர்தல் ஓட்டுப்பதிவுக்காக பெரும்பாலான போலீசார் ஓட்டுச்சாவடி, சாலைகளில் பாதுகாப்பு பணிக்கு சென்றனர். கடந்த 24 நாட்களாக தேர்தல் பணியில் போலீசார் இருந்தனர். ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றிய போலீசாருக்கு மறுநாள் 10ம் தேதி விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி 10ம் தேதி ஒருநாள் போலீசார் விடுமுறையில் இருந்தனர். நேற்று முன்தினம் முதல் தங்கள் பணிக்கு போலீசார் திரும்பினர்.
மேலும்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை தர மத்திய அரசு தடையா? ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் நிர்மலா பதிலடி
-
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
-
தி.மு.க., வியூகம் - ஏமாறும் பழனிசாமி
-
மகளிருக்கு ரூ.2,000 வழங்கப்படும் காஞ்சி வேட்பாளர் நித்யா சுகுமார்
-
'பீப்' கொடுத்தால் 'போர்க்' தரணும் போராட்டத்தால் வெடித்த சர்ச்சை: சென்னை பல்கலை விடுதியில் பதற்றம்
-
நெல் கொள்முதல் நிலையங்கள் ஆண்டு முழுதும் செயல்படும் அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம்