சித்திரை கனி: சூடு பிடிக்கும் விற்பனை 

கோவை: சித்திரைக்கனியை முன்னிட்டு மார்க்கெட்டில், பூ மற்றும் பழங்கள் விற்பனை சூடு பிடித்தது.

தமிழ் புத்தாண்டு சித்திரை கனி பண்டிகையை ஒட்டி, கோவை மார்க்கெட்டில் பூ மற்றும் பழங்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. ஏராளமானவர்கள் பூஜைக்கு தேவையான பூ மற்றும் பழங்களை வாங்கி சென்றனர்.

மல்லி, முல்லை மற்றும் ஜாதிமல்லி கிலோ, 600 ரூபாய்க்கும், அரளி 240 ரூபாய்க்கும், சாமந்தி 140 ரூபாய்க்கும், ரோஜா 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆப்பிள் 280 ரூபாய்க்கும், மாதுளை, 240 ரூபாய்க்கும், ஆரஞ்சு 140 ரூபாய்க்கும், மாம்பழம் 175 ரூபாய்க்கும், சாத்துக்குடி மற்றும் அன்னாசி பழங்கள் கிலோ 60 ரூபாய்க்கும், வாழைப்பழம் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement