பறக்கும் படை சோதனை ரூ.50 கோடி நகை பறிமுதல்

மதுரை: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட, 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட எஸ்.எஸ்.காலனியில், நிலையான கண்காணிப்பு குழுவினர், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, விமான நிலையம் நோக்கி சென்ற, 'லாஜிஸ்டிக்' நிறுவன வேனை மறித்து, சோதனையிட்டனர்.

அதில், 10 பெட்டிகளில் தங்கம், 3 பெட்டிகளில் இருந்த வெள்ளி என, 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், உரிய ஆவணங்கள் இன்றி, எடுத்து வரப்பட்டது தெரிந்தது.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட அந்த நகைகள், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement