மது போதையில் அடிதடி காயமடைந்த ஒருவர் பலி
நெகமம்: நெகமம் அருகே உள்ள ஏரிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, அதே ஊரைச் சேர்ந்த மாசாணி, 57, கூலித்தொழிலாளி மற்றும் வீரன், 65, கூலித்தொழிலாளி ஆகிய இருவரும், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 9ம் தேதி ஒருவருக்கொருவர் மாற்றி அடித்து சண்டையிட்டுள்ளனர். இதில், வீரன் ரோட்டில் கிடந்த கான்கிரீட் கல்லை எடுத்து, மாசாணியின் பின்பக்க தலை பகுதியில் தாக்கியதில் காயம் ஏற்பட்டது. இதைக்க ண்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த மாசாணி, நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து, நெகமம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குப்பை கழிவுகள் கொட்டி எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
-
வெயிலால் வறண்டு வரும் ஏரிகள் கவலையில் ஆழ்ந்த விவசாயிகள்
-
எல்லையம்மன் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
-
கடம்பத்துார் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்படும் பிரசாரத்தில் அ.தி.மு.க., பி.வி.ரமணா வாக்குறுதி
-
விவசாயிகள், நெசவாளர்களுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்துவேன் தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதி
-
தி.மு.க., வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் வி.சி., கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்
Advertisement
Advertisement