'ஆண்டாள் வைபவம்' ஆன்மிக சொற்பொழிவு

பாலக்காடு: கேரள பிராமண சபா கல்பத்தி உபசபையின் சார்பில், பிரபல ஆன்மிகச் சொற்பொழிவாளர் வெங்கடேஷ் 'ஆண்டாள் வைபவம்' குறித்த ஆன்மிக சொற்பொழிவு, கல்பாத்தி ஷிப்ரா கணபதி ஹாலில் நடந்தது.

புகழ்பெற்ற சொற்பொழிவாளரான வெங்கடேஷ், ஆண்டாளின் பெருமைகளையும் ஆன்மிக சிறப்புகளையும் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வை, கேரள பிராமண சபையின் முன்னாள் மாநிலத்தலைவர் கரிம்புழா ராமன் தொடங்கி வைத்தார். கல்பத்தி உபசபைத் தலைவர் காசி விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

சபை நிர்வாகிகளான சந்தான கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமணி, கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணன், நடராஜன், மகளிர் அணி சார்பில் செயலாளர் லலிதா கணேசன் மற்றும் பொருளாளர் சியாமளா ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

Advertisement