மத்திய அமைச்சருக்கு தே.மு.தி.க., சுதீஷ் கடிதம்

சென்னை: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, தே.மு.தி.க., ராஜ்யசபா எம்.பி., சுதீஷ் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக, ஆம்பூர் உள்ளது. இங்கு தோல் தொழில் மற்றும் காலணி தொழில் நடந்து வருகிறது. ஆம்பூரில் பணிபுரியும் பலர் திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில், உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களுக்கு நீண்ட துாரம் பயணிக்க வேண்டி யுள்ளது. எனவே, மும்பை - நாகர்கோவில் விரைவு ரயிலை ஆம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Advertisement