ரூ.340 கோடிக்கு ஏற்றுமதி ஆர்டர் பெற்ற பி.இ.எம்.எல்.,

பெங்களூரு, ஏப். 14--

மத்திய பொதுத்துறை நிறுவனமான பி.இ.எம்.எல்., என்ற பாரத் எர்த் மூவர்ஸ், கட்டுமான இயந்திரங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு வினியோகம் செய்ய, 340 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி ஆர்டர் பெற்றுள்ளது.

இந்நிறுவனம் முதல் முறையாக மத்திய கிழக்கு சந்தைக்குள் நுழைகிறது. அங்கு போர் நடந்து வரும் நிலையில், மறுகட்டமைப்பு மற்றும் இதர உள்கட்டமைப்பு தேவைகளுக்காக இந்த ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், விற்பனை மட்டுமின்றி, அதற்கான இயந்திர பராமரிப்பு, உதிரிபாகங்கள் மற்றும் இதர சேவைகளை வழங்குகிறது.

முன்னதாக, 500 கோடி ரூபாய் மதிப்பில் ஆப்ரிக்க நாடுகளிடம் இருந்து ஆர்டர் பெற்று இருந்த இந்நிறுவனம், மொத்தமாக 890 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி ஆர்டர் வைத்துள்ளது.

Advertisement