இலவச திட்ட அறிவிப்புகளுக்கு வணிகர் பேரமைப்பு எதிர்ப்பு

ஈரோடு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ஈரோட்டில் அளித்த பேட்டி:

திருவாரூரில் வரும் மே 5ல், மாநில வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு நடக்கிறது. ஈரான் போரினால் ஹோட்டல் வர்த்தகம் கடுமையாக பாதித்துள்ளது.

தேர்தல் கமிஷன் அதிகாரிகள், வாகனச்சோதனை என்ற பெயரில், வியாபாரிகள் கொண்டு செல்லும் பணம், பொருட்களை பறிப்பதை கண்டித்து, கடையடைப்பு நடத்தினோம். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் பேச்சு நடந்த பின், பறிமுதல் நடவடிக்கை குறைந்துள்ளது.

சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளாக, ஒவ்வொரு கட்சியும் இலவச அறிவிப் புகளை வெளியிடுகின்றன. அந்த இலவச திட்டங்களால், வணிகர்கள் மற்றும் மக்கள் மீது வரிச்சுமை அதிகரிக்கும். எனவே, இலவசமே வேண்டாம். அதற்கு மாற்றாக, தரமான சாலைகள், உள் கட்ட மைப்புகள், நீர்நிலைகளை துார்வாரும் பணிகளை செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement