அவிநாசி தொகுதியில் எல்.முருகன் ஓட்டுவேட்டை தீவிரம்

1

நமது நிருபர்



அவிநாசி சட்டசபை தொகுதியில் உள்ள வாக்காளர்களை நேரில் சந்தித்து கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த கோரிக்கைகளை மத்திய அமைச்சரும், பாஜ வேட்பாளருமான எல். முருகன் கேட்டறிந்தார். அவர் பழங்கரை பஞ்சாயத்திற்குட்பட்ட ஆயக்கவுண்டம்பாளையம் ஏடி நகர் பகுதியில் மக்களைச் சந்தித்து ஓட்டு சேகரித்தார். மக்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார்.

தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திமுக, மக்களின் உழைப்பைச் சுரண்டுவதாகவும், மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதாகவும் மக்களிடம் எல்.முருகன் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கும், அவிநாசி சட்டசபை தொகுதிக்கும் ஏற்படவிருக்கும் நன்மைகள் குறித்து விளக்கமளித்தார். மக்களுடன் உணவு அருந்தினார்.

Advertisement