தமிழ்நாடு மால்கம் கழக தேர்தல் செயல் தலைவர், நிர்வாகிகள் தேர்வு

விழுப்புரம்: தமிழ்நாடு மால்கம் கழக புதிய செயல் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

விழுப்புரம் ஜான் டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த தேர்தலில் தேர்தல் அலுவலர் நீலமேகவண்ணன், மேற்பார்வையாளர்கள் மற்றும் தேசிய மால்கம் சம்மேளன துணைத் தலைவர் நாயக் சுபஸ்ரீ, தமிழ்நாடு மால்கம் கழக நிறுவன தலைவர் உலகதுரை முன்னிலை வகித்தனர்.

இதில், நிறுவன செயல் தலைவராக துரை செந்தில்குமார், தலைவராக டாக்டர் அரவிந்தன், பொதுச் செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் விசு, முதன்மை துணைத் தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர்கள் ராஜ மோகன்தாஸ், சங்கர், டாக்டர் மனோகரன், யாமினி, தீபிகா, துணைச் செயலாளர்கள் கீதா, ரமேஷ், கார்த்திக், தங்கராஜ், நாகராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகன், சங்கரநாதன், அன்னலட்சுமி, விக்னஸ்வரி, புலிப்பாண்டி, சுப நந்தினி, ராஜாத்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement