போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!
நமது சிறப்பு நிருபர்
‛‛உங்களுக்காக பல வலிகளை தாங்கி வந்திருக்கிறேன்.....''
‛‛உங்களுக்காகவே உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்திருக்கிறேன்.....''
‛‛ஒவ்வொரு வீட்டிலும் விஜய் இருப்பான்''...
‛‛அண்ணனாக, தம்பியாக, மகனாக நான் இருப்பேன்....''
இப்படியெல்லாம் அரசியல் மேடைகளில் நீட்டி முழக்கி வீர வசனம் பேசும் விஜய், தன்னை நம்பி. தனது பின்னால் வரும் இளைஞர்களை நல்வழிப்படுத்த இதுவரை ஏதாவது செய்திருக்கிறாரா என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. விஜய் போகும் இடமெல்லாம் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் கூடுகிறார்கள்.
அவரைப் பார்த்து வெறித்தனமாக கூச்சலிடுகிறார்கள். பலர் உயிரைப் பணயம் வைத்து பைக்குகளில் விஜய் வாகனத்தை துரத்துகிறார்கள். ‛‛விஜய் தான் எங்களுக்கு எல்லாமே. விஜய்க்கு தான் ஓட்டுப் போடுவோம். விஜய் மட்டுமே மாற்றத்தைத் தருவார் என்றெல்லாம் பரபரப்பாக பேட்டி தருகிறார்கள். பல வீடுகளில் பெற்றோர்களும் தங்கள் பி்ள்ளைகளுக்காக விஜயை கவனிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
ஆனால், உண்மையில் இந்த இளைஞர்களை நல்வழிப்படுத்த விஜய் இதுவரை என்ன செய்துள்ளார் என்று பல பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே தமிழக இளைஞர்கள் மத்தியில் கஞ்சா, போதை மருந்து நடமாட்டம் அதிகரித்துள்ளது என்ற பெரும் குற்றச்சாட்டு இருக்கிறது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதற்கு இந்த போதை பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.நடிகர் ரஜினிகாந்த் கூட, சமீப காலமாக சில இடங்களில் பேசும்போது, ‛‛இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது. அப்படி செய்தால் உங்கள் மனமும் உடலும் கெட்டு விடும்'' என்று கூறி இளைஞர்களை நல்வழிப்படுத்த முயற்சிக்கிறார்.
நடிகர் அஜித் கூட, ‛‛படம் பார்க்கும்போது நடிகர்களை ரசியுங்கள். அதோடு விட்டுவிட்டு, குடும்பத்தை கவனியுங்கள்'' என்று பல முறை பேசியுள்ளார். ஆனால் இந்த விஜய் என்ன செய்கிறார். தனது படங்களில் புகை பிடிக்கிறார், போதையை நன்கு ஏற்றி படுக்கையில் விழுந்து கிடக்கிறார். கேரக்டருக்காக அப்படி நடித்தாலும், அதை தனது ரசிகர்களும் பின்பற்றுவார்களே என அவர் யோசிப்பதில்லை.
சரி, படத்திற்காக வேறு வழியில்லாமல் அப்படி நடிப்பதாகவே வைத்துக்கொள்வோம். அதன் பிறகாவது, ‛‛என் நெஞ்சில் குடிகொண்டு இருக்கும் ரசிகர்களே. நான் செய்வது எல்லாமே சினிமாவுக்காகத் தான். அதை நிஜ வாழ்க்கையில் செய்யாதீர்கள். போதை பக்கமே போகாதீர்கள். குடும்பம் சீரழிந்துவிடும். உங்கள் குடும்பத்தை பாருங்கள். போதை உங்களை அழித்து விடும்'' என்று என்றைக்காவது பேசி உள்ளாரா.
பணம் சம்பாதிப்பதற்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று தானே நினைக்கிறார். தனது ரசிகர்களும் போதையின் பிடியில் சிக்கி இருந்தால் தான் மூளைக்கு வேலை கொடுக்க மாட்டார்கள். தனது படங்களை தேடித்தேடி பார்ப்பார்கள். நாமும் நிறைய சம்பாதிக்க முடியும் என்றுதானே நினைக்கிறார்.
உண்மையில் மக்கள் நலனுக்காக அரசியலுக்கு வருபவராக இருந்தால், தனது லட்சோப லட்சம் ரசிகர்களுக்கு அவர் அறிவுரை சொல்லி இருக்க வேண்டும் அல்லவா. ஏன் அவர் அதை செய்யவில்லை. அப்படி என்றால் நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிக்கிறாரா என்ற கேள்விகள் எழுகின்றன.
என்ன செய்யப் போகிறார் விஜய்?
எல்லாருக்கும் அறிவு வேணும்
நடிகர் விஜய் கட்சி திமுகவை விட மிக ஆபத்தானது, விஜய்கே அரசியல் தெளிவு கிடையாது இவர் பின்னால் படை எடுக்கும் கூட்டங்கள் வெறும் செம்மறி ஆட்டு மந்தைகள். இந்த அளவு சமுதாயம் நடிகர்கள் பின்னால் சென்று சீர்ழழிவுக்கு காரணம் இந்த திராவிட கட்சிகள் தான், நம் நாட்டின் உண்மையான போராட்ட வரலாற்றை மறைத்து உணர்வற்ற வரலாற்றை போதித்ததும் முக்கிய காரணம். இந்த தெளிவற்ற நடிகர் பின்னால் அரசியல் பக்குவம் அற்ற இளஞ்சர்கள் கூட்டம் செல்வதை பார்த்தால் மனம் வேதனை படுகிறது.
சினிமா போதையை வைத்து வந்ததுதானே திராவிடம் என்ற கோட்பாடே... உண்மை அப்படி இருக்கும் பொழுது இவர் மட்டும் போதை வேண்டாம் என்று எப்படி சொல்லுவார்?
ரசிகர்களின் தவறான சிந்தனையால் போக்கினால் தமிழகம் அரசியலில் சரியான பாதையிலிருந்து விலகிச் சென்றுக் கொண்டிருக்கின்றது. 18 வயதில் பள்ளிப் படிப்பில் சரியான கவனமோ அக்கறையோ தெளிவோ யில்லாதவன் அரசியல் தெளிவில்லாத நிலையில் அவன் எதை சிந்தித்து வாக்களிப்பான்
விஜய் குடிப்பழக்கம் உள்ள இளைஞர்களுக்கு அறிவுரை கூறினால் மட்டும் குடியை ஒழிக்க முடியுமா? ரஜினி எல்லாவற்றையும் எல்லை மீறி அனுபவித்து தன் உடல்நிலை மோசமான நேரத்தில் சிங்கப்பூர் மருத்துவமனை சென்று திரும்பி வந்து அறிவுரை கூறினார். அனுபவித்து பின் அறிவுரை கூறுவது இன்றும் பெரிதல்ல. இது தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில் விஜய் மீது ஏதோ பழி சொல்ல வேண்டுமென்று சொல்லப்படுவது. இதுவரை மாறி, மாறி ஆட்சி செய்த கட்சிகளே இதை பற்றி கவலை படவில்லை. மது உற்பத்தி ஆலைகள் எல்லாம் அவர்கள் கையில். மே 4 ஆம் தேதி எல்லாம் தெரிந்துவிடும்.
நடிகர் ரஜினிகாந்த் கூட இந்த மாதிரி பழக்கவழக்கங்கள் இருந்தால் நல்லது இல்லை என்று சொல்லி இருக்கிறார். யாரு எத சொல்றது
யோக்கியன் வரான் சொம்பை எடுத்து வை....
நடிப்பவனை நம்பி ஒட்டு போட்டால் இது ஹான் கதியை என்று சிம்பாலிக்கா தெரிவிக்கிறார். கட்சியை திரு ஸ்டாலின் ஆசியால் தொடங்க பட்டது.
திரைத்துறை சகலவிதமான தவறான பழக்கங்களையும் ஆதரித்து வளர்கக்கூடியது...போதைவிற்ற காசில் எடுத்த படங்களே இவர்களின் பிழைப்புக்கு வழி...அது உண்மையாக இருந்தால், போதைப் பொருட்களை எப்படி எதிர்ப்பாளர்கள்? போதைப்பொருள் வியாபாரத்தை பெருக்க வழி செய்யமாட்டார்களா? குற்றளாளிகளிடம் நியாயம் நேர்மையை எதிர்பார்க்கும் மவுட்டீகத்தனம் தான் இது.
தலைவர் எவ்வழியோ தொண்டன் அவ்வழி.மேலும்
-
வெயிலின் பிடியில் தகிக்கும் தமிழகம்; வேலூரில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
-
ஹயகிரிவர் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா
-
கடலை பிரித்தெடுக்க வந்தது மிஷின் கூலி தொழிலாளர்கள் வருத்தம்
-
ரயிலில் மோதி வாலிபர் பலி
-
ஓட்டுஎண்ணும் மையத்தில் போலீசார் அவதி: தேர்தல் நடத்தும் அலுவலர் கவனிப்பாரா?
-
பஸ் மோதி மூதாட்டி பலி