மேற்காசியா போர் : அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி ஆலோசனை
புதுடில்லி: மேற்காசியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்., 28ம் தேதி முதல் போர் தொடுத்து வருகின்றன. உலக நாடுகளின் வலியுறுத்தத்தைத் தொடர்ந்து, தற்காலிகமாக, இரண்டு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சமீபத்தில் பேச்சு நடந்தது. தொடர்ந்து, 21 மணி நேரம் நடந்த பேச்சு, எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்நிலையில், போர் நிறுத்த நடவடிக்கைக்கு பிறகு, இந்த விவகாரம் குறித்து அதிபர் டிரம்ப் பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் 40 நிமிடம் ஆலோசனை நடத்தினர். போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவது இதுவே முதல்முறையாகும். அப்போது இந்திய மக்கள் உங்களை விரும்புவதாக டிரம்ப்பிடம் மோடி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியா கோர் கூறியதாவது:
சில நிமிடங்களுக்கு முன்பு இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசினர். தகவல்களை தொடர்ந்து பிரதமர் மோடியிடம் டிரம்ப் பரிமாறி வருகிறார். இருவரும் ஈரான் போர் மற்றும் வர்த்தகம் குறித்து விவாதித்தனர் எனத் தெரிவித்துள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தை நடத்த சரியான இடம் இந்தியா. அதுவும் பாரத பிரதமர் மோடிஜியின் முன்பு பேச்சுவார்த்தை நடக்கவேண்டும்.
மேற்காசிய போரால் அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளும் பரிதவித்துவரும்போது, இந்திய அரசு பிரமாதமாக எந்த பிரச்னையுமின்றி இந்த போரை சமாளித்து வருவது பாராட்டத்தக்கது.
கிறுக்குகிட்ட அதுபோக்குல பேசிதான் காரியத்தை சாதிக்கணும்... அதைத்தான் விஷ்வகுரு பண்ணிருக்கார் போல
இந்திய மக்கள் டிரம்பை விருபுகிறார்கள்??????
டிரம்ப்பையும் அவரது செயல்பாடுகளையும் யாருக்கும் பிடிப்பதில்லை. அவர்தான் பிரச்சனைகளை உருவாக்குகிறார்..!!!
இந்தியாவால் மட்டுமே சமாதானத்தைக் கொண்டுவர முடியும் என்று ஈரான் சொன்னதை நினைத்துப் பார்க்கவேண்டும் ....
yes Donald Trump only called and asked for help
this is BJP wing news
ஆக தீயமுக சல்மா இப்போ சிறப்பு தொழுகை தினமும்
இந்த சந்திப்பு முதலிலேயே நடந்திருந்தால் இந்த பாகிஸ்தானின் மத்தியஸ்தம் வேலை நடந்திருக்காது பாரத பிரதமர் மோடி அதை சரியாக நடத்தி இப்போது அங்கே அமைதி நிலவி இருந்திருக்கும் ஆனால் மத்தியஸ்தம் செய்பவர்களுக்கும் ஒரு தகுதி திறமை எல்லாம் வேண்டும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தான் ஒருமத்தியஸ்த நாடா? என்றுதான் உலகமே வியக்கிறது உலகிலேயே அமைதி என்ற சொல்லுக்கு அர்த்தம் கொடுக்கும் ஒரே நாடு இந்தியாதான் அதை நடைபடுத்தும் திறமை கொண்டவர் நமது பாரத பிரதமர் மோடி ஒருவர்தான் அவரிடம் சரியாக டிரம்பு பேசி மரியாதையுடன் நடத்தினால்
உலக அமைதி ஏற்படும் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு பாதியில் மாட்டிக்கொண்டு இப்போது அமெரிக்க திபர் டிரம்பு திண்டாடிக்கொண்டிருக்கிறார் உலகிற்கே ஆபத் சகாயர் மோடி அவர்களின் சேவை இப்போது மிக மிக அவசியம்
டிரம்ப் என்ன பேசினாலும் இவரை நம்பி இந்தியா, எந்தவித மத்தியஸ்த பேச்சுவார்த்தையிலும் பங்கேற்காது. ஏனைய மேலை நாடுகள் டிரம்பை கைவிட்டு விட்டனர். அவர்களைப் பொறுத்தவரை மத்திய கிழக்கு என்றால் "எண்ணெய்" வர்த்தகம் மட்டுமே. அங்கே நிலவும் அசாதாரண அரசியல் நிலைகளை கண்டுகொள்ள மாட்டார்கள். நம் நிலையும் அவ்வாறு மட்டுமே இருக்க வேண்டும்.மேலும்
-
பாமக குழப்பங்களுக்கு ஸ்டாலினும், சபரீசனும்தான் காரணம்; அன்புமணி புகார்
-
உண்மை உறங்காது; நமக்காக பிரசாரம் செய்யும் பிரேமலதாவுக்கு நன்றி; இபிஎஸ்
-
தமிழகத்தை முற்றுகையிட்ட மற்ற மாநில முதல்வர்கள்: தேஜ கூட்டணி ஒற்றுமை ‛‛இண்டி'' கூட்டணியில் இல்லை!!
-
கரும்பு சாறு பிழிந்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்; அண்ணாமலை- வானதி பைக் பேரணி
-
போன் போட்டா வந்து சேருது பணம்!
-
தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு