தமிழகத்தை முற்றுகையிட்ட மற்ற மாநில முதல்வர்கள்: தேஜ கூட்டணி ஒற்றுமை ‛‛இண்டி'' கூட்டணியில் இல்லை!!
நமது சிறப்பு நிருபர்
எந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் மற்ற மாநில முதல்வர்களின் ‛‛படையெடுப்பு'' அதிகமாக இருக்கிறது. தேஜ கூட்டணிக்கு தான் இந்தியாவில் அதிக முதல்வர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு முதல் எதிரி ‛‛இண்டி'' கூட்டணியின் முக்கிய கட்சியான திமுக தான். எனவே, திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்யவும், தேஜ கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டுகளை பெறவும் இவர்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரம் செய்கின்றனர்.
தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்தியப் பிரதேசம் முதல்வர் மோகன் யாதவ், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, டில்லி முதல்வர் ரேகா குப்தா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என 6 மாநில முதல்வர்கள் தமிழகம் வந்தனர். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மட்டுமே பிரசாரம் செய்தனர்.
இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், தேஜ கூட்டணிக்கு ஆதரவாக பல முதல்வர்கள் வந்த நிலையில் ‛‛இண்டி'' கூட்டணி முதல்வர்களின் வருகை சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. உதாரணமாக தமிழகத்தின் அருகே உள்ள கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டி போன்றவர்கள் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வரவில்லை.
இதுபற்றி கருத்து தெரிவிக்கும் அரசியல் நோக்கர்கள், ‛‛தேஜ கூட்டணி முதல்வர்களுக்குள் உள்ள ஒற்றுமை, இண்டி கூட்டணி முதல்வர்களுக்குள் இல்லை. பாஜ கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக இருக்கும் இண்டி கூட்டணி கட்சிகள், தங்களுக்குள் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில் ஒற்றுமையாக இருப்பதில்லை. இவர்கள் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி'' என்கின்றனர். எது எப்படியோ, இண்டி கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாதது தேஜ கூட்டணிக்கு பெரிய சாதகமாக அமைந்துள்ளது.
உங்கள் கருத்து திணிவிப்பு , இதை நீங்கள் அமித்ஷா விடம் கேட்டாலே சொல்லி இருப்பாரே , 26000 பேர் பார்த்தது வேஸ்ட் , தேர்தலுக்கு முன்னர் வாரம் ஒரு முறை வந்தவர் கூட்டணி அறிவித்த வுடன் கடைசியில் ஒரு நாள் பேருக்கு வந்தார் அப்போவே தெரியவில்லை , அவருக்கு உளவு துறை ரிப்போர்ட் போயி இருக்கும் DMK தான் வெற்றி பெரும் என்று
கம்யுனிஸ்ட் மற்றும் கான் கிராஸ் முதல்வர்கள் வந்தால்...... யாருக்கு ஓட்டு கேட்பார்கள்..... மாற்றி ஓட்டு கேட்டால்..... கேரளா மற்றும் மேற்கு வங்கம் புட்டுக்கும்..... தமிழர்கள் மட்டும் இளிச்ச வாயர்கள்..... அதனால் அவர்கள் தலையில் மட்டும் மிளகாய் அரைப்பார்கள்.
ஆமாம், அப்படியே எல்லா மாநில பாஜக முதல்வர்களும் வந்து பிரசாரம் செய்து ஓட்டுக்களை அறுத்து தள்ளி அறுவடை செய்து விடுவார்களாக்கும்? எல்லாம் உள்ளூரிலேயே விலை போகாதவர்கள்!
உள்ளூரில் விலை போகாமலா.... இந்தியாவில் அத்தனை மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள்.... உங்கள் டாஸ்மாக் மூளைக்கு அதெல்லாம் தெரியாது.
கள்ளசாராயத்திற்கு இருவந்தவருக்கு பத்து லட்சமும் ராணுவத்தில் இறந்தவருக்கு இரண்டு லட்சமும் கொடுத்தால் எந்த முதல்வர்கள் ஆதரவு கொடுப்பார்கள்
20 வருடங்கள் பிஜேபி ஆளும் மத்திய பிரதேசம் எல்லா வகையிலும் தமிழ் நாட்டை விட பின்தங்கியுள்ளது
இங்கே வந்த மற்ற மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலம் எந்தெந்த வகைகளில் தமிழ்நாட்டை விட முன்னேறி உள்ளது என்று சொல்லவே இல்லை.
ஒற்றுமையை பாராளுமன்றத்தில் பார்த்த உள் துறை அமைச்சரும் பிரதமரும் ஆடி போய் உள்ளதாக வடமாநில சேனல்கள் தெளிவாக கூறுகின்றனர்.
அது எல்லாம் சரிங்கோ நேரு மற்றும் வேலு இருவரையும் இன்று வரைக்கும் ED நெருங்க கூட முடியவில்லையே இதற்கு பின்னல் நீங்கள் இருப்பதாக ஒரு பேச்சு ulladahe ? இருவருக்கும் மறைமுகமாக எதுவும் உதவி செய்ய படுகிறதா ? இதை தமிழக மக்கள் கேக்குறார்கள்.
இது நாட்டு ஒற்றுமையை பிரதிபலிக்கவில்லை. தமிழ்நாட்டை கூறுபோடும் சதியைத்தான் பிரதிபலிக்கிறது. தமிழ்நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க நடத்தப்படும் படையெடுப்பு. தமிழ்நாட்டின் நலனை சீரழிக்க புறப்பட்டுள்ள noikirumikal
ஏற்கெனவே.... ஆந்திரா... கர்நாடகா.... கேரளா.... மாநிலங்களில் இருந்து வந்து.... தமிழ் நாட்டை கொள்ளை அடித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.....அதனால் இனிமேல் புதிதாக கொள்ளை அடிக்க என்ன இருக்கிறது ?
இப்பொழுதல்ல எப்பொழுதுமே இந்தியா கூட்டணிக்கட்சிகளுக்குள் ஒற்றுமை இருந்ததில்லை. அது ஒரு நண்டு கூட்டணி. யார் எப்போது யாரை கீழே இழுத்துவிடுவார்கள் என யாருக்கும் தெரியாது.மேலும்
-
ஊழலற்ற ஆட்சியை விஜய் தருவார்:P த.வெ.க., வேட்பாளர் பிரபாகர் பேச்சு
-
இருசக்கர வாகன அணிவகுப்பில் ஓட்டு சேகரித்தார் சிற்றரசு
-
அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா
-
தவறான சிகிச்சையால் இளம்பெண் இறப்பு? மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை!
-
சென்னை சூப்பர் லீக் கால்பந்து :பச்சையப்பாஸ் எப்.சி., அபாரம்
-
சீனியர் லீக் கால்பந்து போட்டி: சென்னை போலீஸ் அபாரம்