கரும்பு சாறு பிழிந்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்; அண்ணாமலை- வானதி பைக் பேரணி
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் கரும்பு சாறு பிழிந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கோவையில் வானதி சீனிவாசன் உடன் அண்ணாமலை இணைந்து இருசக்கர பேரணி பிரசாரம் செய்தார்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் தொகுதியில் நடந்து சென்று, பொதுமக்களை சந்தித்து திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். சாலையில் நடந்து சென்ற மக்களிடம் கை குலுக்கியும், புகைப்படம் எடுத்தும் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ந்தார்.



தொடர்ந்து வேளச்சேரி காந்தி சாலையில் நடந்து சென்று காங்கிரஸ் வேட்பாளர் அசன் மளலானாவுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து ஆட்டோவில் சென்று முதல்வர் ஓட்டு சேகரித்தார். சைதாப்பேட்டையில் ஒரு கடையில் முதல்வர் ஸ்டாலின் கரும்பு சாறு பிழிந்து பிரசாரம் செய்தார்.
கோவையில்.…
@block_Y@
அதேபோல், கோவையில் வானதி சீனிவாசன் உடன் அண்ணாமலை இணைந்து இருசக்கர பேரணி பிரசாரம் செய்தார். வானதி சீனிவாசனை அமர வைத்து இருசக்கர வாகனத்தை அண்ணாமலை ஓட்டிச்சென்றார். பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.block_Y
@block_G@
நிருபர்களிடம் வானதி சீனிவாசன் கூறுகையில், ''அன்பு தம்பி அண்ணாமலைக்கு நன்றி. யார் வளர்ச்சிக்காக வேலை செய்வார்கள், மக்களுக்காக உழைப்பார்கள் என்று கோவை மக்களுக்கு தெளிவாக தெரியும், என்றார்.block_G
உங்களையும் இப்படி தான் பிழிய போகிரேன் என்று சிம்பாலிக்காக தெரிவிக்கிறார்.
ஓட்டு போட்டால் மக்களை சக்கையாக பிழிந்து எடுத்துவிடுவார்
ஸ்டாலின் ரோடு ஷோ அன்றைக்கு சால்வை போற்ற வந்தவரை கும்கும்னு கும்மினார்கள் ஆனால் இன்றைக்கு பாட்டி கையில் முத்தம் கொடுங்கும் போது அமைதி.
வானதி தலை கவசம் அணியவில்லை.
கரும்பு சாறு பிழிந்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் - பெரிய சார் என்ன உணர்த்துகிறார் >> இப்படித்தான் வந்தேறிகளாகிய நாங்கள் தமிழர்களைபிழிந்து எங்கள் குடும்பங்களை வளப்படுத்திக் கொண்டோம் .... இனியும் வாய்ப்புக்கொடுத்தால் தொடர்வோம் .....
நான் சாமானியன் . சென்ற வருடம் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த என் மனைவி தலை கவசம் அணியவில்லை என்று 1000 ரூபாய் ரசீது கொடுத்தார்கள் . ஆனால் இங்கு தலைவர்களாக இருப்பவர்கள் மக்களுக்கு உதாரன தலைவர்களாக இருப்பவர்கள் மூன்று மற்றும் இரு சக்கர வாகனத்தில் சட்டத்திற்கு புறம்பாக செல்கிறார்கள் . இவர்களுக்கு யார் பாடம் எடுப்பது
ஸ்டாலின் வரியை அதிக மாக்கி
மக்களை பிழிஞ்சு எடுத்து விடுவார்
இதெல்லாம் தேவையில்லை, ஒரு மாநில முதல்வரா என்ன செய்தோம், என்ன செய்ய போகிறோம் என்பது தானே தவிர கரும்பு ஜூஸ் அல்ல.
வானதிக்கு இப்பொழுதாவது புத்தி வந்ததா அல்லது இதுவும் ஒரு நாடகமா?
மக்களை பிழிந்து எடுத்து ஒரு குடும்பம் சம்பாதிப்பதை சிம்பாலிக்கா செய்து காண்பித்து விட்டார்மேலும்
-
நடிகர் சத்யராஜ் குடும்பத்தினர் நடத்தும் அரசியல் நாடகம்: அப்பா, மகள் திமுக., மகன் தவெக.,
-
இந்தியா எதையும் மறக்காது; பஹல்காம் சம்பவத்தை நினைவு கூர்ந்த ராணுவம்
-
பாமக குழப்பங்களுக்கு ஸ்டாலினும், சபரீசனும்தான் காரணம்; அன்புமணி புகார்
-
உண்மை உறங்காது; நமக்காக பிரசாரம் செய்யும் பிரேமலதாவுக்கு நன்றி; இபிஎஸ்
-
தமிழகத்தை முற்றுகையிட்ட மற்ற மாநில முதல்வர்கள்: தேஜ கூட்டணி ஒற்றுமை ‛‛இண்டி'' கூட்டணியில் இல்லை!!
-
போன் போட்டா வந்து சேருது பணம்!