எத்தனால் கலப்புதான் சிறந்த தீர்வு 'டி.வி.எஸ்., மோட்டார்' இயக்குநர் கருத்து
புதுடில்லி:மின்சார வாகனங்கள் எதிர்கால தொழில்நுட்பமாக இருந்தாலும் இறக்குமதி சார்ந்து உள்ளது, எத்தனால் கலப்பு பெட்ரோல், இந்திய சூழலுக்கு விலை குறைவான, விரைவான தீர்வாக இருக்கும் என டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுதர்ஷன் வேணு கருத்து தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
இ20 என்ற 20 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோல், இ25, இ27 என அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு உந்துகோலாக உள்ளது. ஆனால், கவனமாக படிப்படியாக முன்னேற வேண்டும். மத்திய அரசு அதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
மின்சார, எத்தனால் கலப்பு பெட்ரோல் வாகனங்களை ஒப்பிட முடியாது. மின்சார வாகனங்கள் எதிர்கால தொழில்நுட்பமாக இருந்தாலும் இறக்குமதி சார்ந்து உள்ளது.
எத்தனால் கலப்பு பெட்ரோல், இந்திய சூழலுக்கு விலை குறைவான, விரைவான தீர்வாகும். இரண்டையும் பயன்படுத்த வேண்டும்.
எத்தனால் கலப்பு பெட்ரோல் பைக்கை 2019ல் அறிமுகப்படுத்தினோம். 85 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோல் வாகனத்தை காட்சிப்படுத்தினோம். எத்தனால் கலப்பை அதிகரிக்கும் வகையில் இருசக்கர வாகன தொகுப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கட்டுமான திட்டங்களுக்கு பிரீமியம் எப்.எஸ்.ஐ., எப்படி கணக்கிடப்படுகிறது?
-
அரசியல் களத்தில் நடப்பது என்ன? பரபரப்பு தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்
-
கருப்பு என்பது காளி தேவியின் நிறம்: பார்லி.,யில் கனிமொழி பேச்சு
-
புதுச்சேரியில் விஜய்க்கு யார் ஓட்டு போட்டனர்?
-
ராகுல் - ஸ்டாலின் கூட்டு பிரசாரம் இல்லை: தி.மு.க., கைவிட்டு விடுமோ என காங்., அச்சம்
-
'அ.தி.மு.க.,வில் அதிக பலனை அனுபவித்தவர் ஓ.பி.எஸ்.,': தினகரன்
Advertisement
Advertisement