ராகுல் - ஸ்டாலின் கூட்டு பிரசாரம் இல்லை: தி.மு.க., கைவிட்டு விடுமோ என காங்., அச்சம்
- நமது நிருபர் -
முதல்வர் ஸ்டாலினும், லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுலும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யப் போவதில்லை என்பது நேற்று உறுதியாகி உள்ளது. இதனால், தங்கள் தொகுதிகளில் தி.மு.க., காலை வாரி விட்டு விடுமோ என்ற அச்சம், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்திற்காக, இன்று தமிழகம் வரும் ராகுல், சென்னையை அடுத்த பொன்னேரி, சோளிங்கர், துறையூர் ஆகிய 3 தொகுதிகளில், காங்., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து, ஒரே மேடையில், ராகுல் பிரசாரம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
இது குறித்து, தமிழக காங்., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஓசூரில் நாளை நடக்கும் பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து, காங்., தலைவர் கார்கே பிரசாரம் செய்கிறார். ராகுலும், ஸ்டாலினும் ஒரே மேடையில் பேசும் திட்டம் இல்லை. ஆட்சியில் பங்கு இல்லை என, ஸ்டாலின் தெரிவித்ததால், அவருடன் இணைந்து பிரசாரம் செய்ய, ராகுல் விரும்பவில்லை. ராகுலின் இந்த முடிவு, தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.
தி.மு.க.,வினரை நம்பியே, காங்., வேட்பாளர்கள் உள்ளனர். காங்., தொகுதிகளுக்கான தேர்தல் செலவை, தி.மு.க., தான் ஏற்றுள்ளது. ஆனால், ராகுல் மீதான அதிருப்தியால், பாரபட்சம் காட்டப்பட்டால், காங்கிரசார் கரையேறுவது கடினம். முதல்வர் ஸ்டாலினுடன் பிரசாரம் இல்லை என்றதும், ராகுல் கூட்டத்திற்கு தி.மு.க.,வினர் செல்ல வேண்டாம் என, கூறப்பட்டுள்ளது. அதேபோல, ஓட்டு போட வேண்டாம் என்றும் கூறி விட்டால் என்னாவது?இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், காங்., சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினரும், முன்னாள் பொதுச்செயலருமான தாம்பரம் நாராயணன் வெளியிட்ட ஆடியோ பதிவில், காங்., போட்டியிடும், மூன்று தொகுதிகளில் மட்டும் ராகுல் பிரசாரம் செய்தால், அந்த மூன்று தொகுதிகளில் தோல்வி அடைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை தி.மு.க.,வினர் எடுப்பரா, எடுக்க மாட்டர்களா? த.வெ.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்க வேண்டும். இப்போது போல, ரெண்டு கெட்டான் அரசியலை காங்கிரஸ் செய்யக் கூடாது,' என கூறியுள்ளார்.
@block_B@ 'கூட்டு பிரசாரம் இல்லை!'
தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி நேற்று கூறுகையில், “ராகுல் இன்று பிரசாரத்திற்கு தமிழகம் வருகிறார். ராகுல் ஒரு பக்கம் பிரசாரம் செய்கிறார். முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்கம் பிரசாரம் செய்கிறார். இருவரும் ஒன்றாக பிரசாரம் செய்ய நேரம் இல்லை. ஏற்கனவே அவர்களின் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளதால், அதற்கான நேரம் இல்லை. அவர்களுக்கு நாங்கள் ஓட்டு கேட்கிறோம். எங்களுக்கு அவர்கள் ஓட்டு கேட்கின்றனர். எல்லாம் ஒன்று தான்.” என்றார்.block_B
வாசகர் கருத்து (11)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
18 ஏப்,2026 - 21:42 Report Abuse
ராகுலின் தமிழகம் வருகை திராவிட மாடல் அரசின் முதல்வருக்குஒரு நெத்தி அடி முதல்வருடன் சேர்ந்து ஒரு தொகுதியில் கூட பேசவில்லை டூ - விட்டுவிட்டாராம் இனி இந்த விரிசல் பெரியதாகி காங்கிரசு கூட்டணியிலிருந்தே விலகி விடும் சரியான அடி 0
0
Reply
ஆகுயர்தான் - ,
18 ஏப்,2026 - 21:01 Report Abuse
ஆக வழக்கம் போல இங்கே dravida ருக்கு ஆரியன் kaul பிரம்மன் நின் உதவி இல்லாமல் இங்கே ஒன்றும் அசையாது. திராவிடம் எப்போதும் டெல்லிக்கு காவடி தூக்கும். அதுவே அவர்களின் மாடல் 0
0
Reply
பேசும் தமிழன் - ,
18 ஏப்,2026 - 19:38 Report Abuse
இண்டி கூட்டணியின் தோல்வி.... நாட்டின்..... நாட்டு மக்களின் வெற்றி.... இண்டி கூட்டணி தோல்வியடைந்தால்..... தேசத்தை நேசிக்கும் நாட்டு மக்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம் !!! 0
0
Reply
dhanavel - ,
18 ஏப்,2026 - 19:05 Report Abuse
daily motion 0
0
Reply
SUBBU,MADURAI - ,
18 ஏப்,2026 - 16:35 Report Abuse
DMK has spent years telling Tamil women they are the partys priority. Then the Womens Reservation Bill came to Parliament and they showed exactly where Tamil women actually sit in their list of priorities. The betrayal was not accidental. It was a vote. Deliberate, recorded and permanent. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
18 ஏப்,2026 - 12:43 Report Abuse
பிரச்சனை மிக பெரிய அளவில் இருக்கிறது. அது எல்லாருக்கும் வெளிச்சமாக தெரிகிறது. 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
18 ஏப்,2026 - 12:26 Report Abuse
அவுங்க பண்ண லொல்லுக்கு திமுக கை விட்டறனும்? 0
0
Reply
ஜெகதீசன் - ,
18 ஏப்,2026 - 10:44 Report Abuse
திமுக ஓட்டு காங்கிரஸுக்கும், காங்கிரஸ் ஓட்டு திமுகவுக்கும் கிடைக்காது. தேமுதிக கதையும் இப்படி தான் போகும். 0
0
Reply
Sun - ,
18 ஏப்,2026 - 10:09 Report Abuse
பாரம்பரிய கூட்டணிக் கட்சியை மரியாதையுடன் நடத்தி இருக்க வேண்டும் ஸ்டாலின். மதுரை மாவட்ட செயலாளர் தளபதியை வைத்து காங்கிரசை மட்டம் தட்டுவது, திருச்சி சிவாவை வைத்து காமராஜரை மட்டம் தட்டியது,செல்வப்பெருந்தகையை தனது கைக்குள் வைத்துக் கொண்டு கூட்டணி இல்லை என்றால் கட்சியை உடைக்க நினைத்தது, கடைசியில் ராகுலை ஒதுக்கி சிதம்பரம் மூலம் கார்கே, சோனியா உதவியுடன் கூட்டணி அமைத்தது 0
0
Reply
Oviya Vijay - ,
18 ஏப்,2026 - 09:13 Report Abuse
0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளித்த 103 வயது முதியவர், மூதாட்டி
-
திருப்போரூர் தொகுதியில் ஓட்டளித்த மக்கள்
-
வயலுாரில் இயந்திரம் பழுது :தாமதமாக ஓட்டுப்பதிவு
-
கிராமங்களில் ஆர்வமுடன் ஓட்டு போட்ட மக்கள்
-
ஓட்டுப்போட படகில் ஆபத்து பயணம் :தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் அவலம்
-
பூந்தமல்லி பசுமை ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
Advertisement
Advertisement