மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை: பன்னாட்டு நிறுவனத்தில் பெண் போலீஸ் ரகசிய ஆபரேஷனில் குற்றவாளிகள் கைது
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் நாசிக் பிபிஓ அலுவலகத்தில் பல பெண் பணியாளர்களை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் பெண் போலீஸ் அதிகாரிகளின் ரகசிய ஆபரேஷனில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் நாசிக் போலீசாருக்கு ஒரு முக்கியமான புகார் வந்தது. நாசிக்கில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பிபிஓ அலுவலகத்தில் பணியாற்றும் இளம் ஹிந்து பெண் ஊழியர் ஒருவர், தான் வேலை பார்க்கும் இடத்தில் இஸ்லாமிய பழக்கவழக்கங்களை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்தப்படுவதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். நிறைய பெண்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேறு சில புகார்கள் வந்தன.
இதையடுத்து, நாசிக் போலீஸார் ஒரு ரகசிய திட்டத்தை தீட்டினர். சுமார் ஒரு மாத காலம், பெண் போலீஸ் அதிகாரிகள், அந்த அலுவலகத்தின் ஹவுஸ்கீப்பிங் ஊழியர்கள் போல் ரகசியமாக உள்ளே நுழைந்தனர். அந்நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தனர். குறிப்பாக மூத்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மீது அதிகப்படியான கவனம் செலுத்தினர். இந்த ரகசிய கண்காணிப்பு மூலம் பல உண்மைகள் தெரிய ஆரம்பித்தன.
பல வாரங்கள் தொடர்ந்து நடந்த இந்த மறைமுக கண்காணிப்பில், பணியிடத்தில் நடந்த தினசரி செயல்பாடுகள் கவனிக்கப்பட்டு, மேலதிகாரிகளுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டன. இந்த போலீஸ் அண்டர்கவர் ஆப்ரேஷன் மூலம் ஆரம்ப நிலை குற்றச்சாட்டுகளை போலீசார் உறுதிப்படுத்தினர்.
முதல் புகார்
இதை தொடர்ந்து மார்ச் மாதத்தில் டியோலாலி போலீஸ் நிலையத்தில் முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஒரு இளம் பெண் ஊழியர், தன் சக ஊழியர் தானிஷ் ஷேக் மீது புகார் அளித்தார். டேனிஷ் தனது திருமணத்தை மறைத்து, திருமணம் செய்வதாக உறுதி அளித்து தன்னுடன் உறவு வைத்ததாகவும், பின்னர் எனது மதப் பழக்கங்களை மாற்ற முயற்சித்ததாகவும், தினமும் தொழுகை நடத்த சொன்னதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் டேனிஷ் ஷேக் மற்றும் தௌசிப் அத்தார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தௌசிப் அத்தாரின் மொபைல் போனில் இருந்த போட்டோக்கள் மேலும் பல புகார்களுக்கு வழிவகுத்தன. அந்த போனில் மற்றொரு பெண் ஊழியர் புர்கா அணிந்த புகைப்படம் இருந்தது. இதனால் விசாரணை விரிவடைந்தது.
விசாரணை விரிவடைந்ததன் மூலம் மார்ச் 26 முதல் ஏப்ரல் 3 வரை டியோலாலி கேம்ப் மற்றும் மும்பை நாகா போலீஸ் நிலையங்களில் மொத்தம் ஒன்பது எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான புகார்கள் 18 முதல் 25 வயது வரையிலான இளம் பெண் ஊழியர்களிடம் இருந்து வந்துள்ளன.
வழக்கு 1 (ஜூலை 2022 - பிப்ரவரி 2026):
குற்றம் சாட்டப்பட்டவர்களான டேனிஷ் ஷேக், தௌசிப் அத்தார் மற்றும் ஹெச்.ஆர்., நீடா கான் ஆகியோர், ஹிந்து தெய்வங்களைப் பற்றி இழிவான கருத்துக்களைத் தெரிவித்து ஒரு பெண் ஊழியரின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரான தௌசிப் அத்தார், திருமணம் செய்துகொள்வதாகப் பொய்யாகக் கூறி பாதிக்கப்பட்டவருடன் உடல் உறவு கொண்டார், அதே நேரத்தில் டேனிஷ் ஷேக் அலுவலக வரவேற்பறையில் அவருடன் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டு அவரை மானபங்கத்திற்கு உள்ளாக்க முயன்றார்.
வழக்கு 2 (மே 2023 - மார்ச் 19, 2026):
குற்றம் சாட்டப்பட்டவர்களான ரஸா மேமன் மற்றும் ஷாருக்கான் குரேஷி ஆகியோர், ஒரு பெண் ஊழியரை முறைத்துப் பார்த்ததாகவும், அவரைத் தவறான முறையில் தொட்டதாகவும், அவரது தனிப்பட்ட திருமண வாழ்க்கை குறித்து அவமானகரமான கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். முறையான புகார் அளிக்கப்பட்ட போதிலும், நிறுவனத்தின் தலைமை அதிகாரி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, குற்றம் சாட்டப்பட்டவரை ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கு 3 (2022 - பிப்ரவரி 2026):
குற்றம் சாட்டப்பட்டவரான ஷாபி ஷேக், கூட்டங்களின் போது பாதிக்கப்பட்டவரை ஆபாசமான முறையில் முறைத்துப் பார்த்ததாகவும், அவரைக் கேலிக்கு உள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், தௌசிப், பாதிக்கப்பட்டவரின் திருமண வாழ்வில் குழந்தைகள் இல்லாதது குறித்து ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்ததோடு, உடல்ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்.
வழக்கு 4 (மே 4, 2025 - டிசம்பர் 2025):
குற்றம் சாட்டப்பட்டவரான தௌசிப் அத்தார், பாதிக்கப்பட்டவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆபாசமான கேள்விகளைக் கேட்டதுடன், அநாகரிகமான சைகைகளையும் செய்தார். மேலும், அலுவலகத்தில் மற்ற ஹிந்துப் பெண் ஊழியர்கள் முன்னிலையில், ஹிந்து தெய்வங்களைப் பற்றி இழிவான கருத்துக்களைக் கூறி மத உணர்வுகளைப் புண்படுத்தினார்.
மேலும், அலுவலகத்தில் மற்ற ஹிந்துப் பெண் ஊழியர்கள் முன்னிலையில், ஹிந்து தெய்வங்களைப் பற்றி இழிவான கருத்துக்களைக் கூறி மத உணர்வுகளைப் புண்படுத்தினார்.
5வது சம்பவம் (2022 - மார்ச் 23, 2026):
குற்றம் சாட்டப்பட்டவர்களான தௌசிப் அத்தார், டேனிஷ், ஷாருக்கான் ஷேக் மற்றும் ரஸா மேமன் ஆகியோர் பாதிக்கப்பட்டவரின் மதத்தை அவமதித்ததுடன், அவரை வலுக்கட்டாயமாகத் தொழுகை செய்யும்படி கட்டாயப்படுத்தினர். அவருக்கு அசைவ உணவை வலுக்கட்டாயமாக ஊட்டிவிட்டு, மதமாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக ஆபாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.
6வது சம்பவம் (செப்டம்பர் 6, 2024 - பிப்ரவரி 2026):
குற்றம் சாட்டப்பட்டவர்களான ஆசிப் அன்சாரி மற்றும் ஷபி ஷேக் ஆகியோர் பெண் ஊழியரின் உடல் குறித்து ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்ததோடு, வேண்டுமென்றே அவரைத் தவறான முறையில் தொட்டனர். இந்தச் சம்பவத்திலும், குற்றம் சாட்டப்பட்ட தௌசிப் அத்தார், பாதிக்கப்பட்டவரின் மதத்துடன் தொடர்புடைய தெய்வங்களுக்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
7வது சம்பவம் (2025 - மார்ச் 2026):
குற்றம் சாட்டப்பட்டவர்களான ஆசிப் அன்சாரி, ஷாருக்கான் குரேஷி, ராஸா மெமன், தௌசிப் அத்தார் மற்றும் ஷபி ஷேக் ஆகியோர் பாதிக்கப்பட்டவரைப் பின்தொடர்ந்ததாகவும், ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்ததாகவும், தீய நோக்கத்துடன் அவரைத் தொட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் கூட்டாகச் செயல்பட்டு, அவரது மதத்திற்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தினர்.
8வது சம்பவம் (ஜனவரி 2025 - தற்போது வரை):
குற்றம் சாட்டப்பட்டவர்களான ராஸா மெமன் மற்றும் ஷபி ஷேக் ஆகியோர் பாதிக்கப்பட்டவரின் விருப்பத்திற்கு எதிராக அவருடன் உடல்ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றனர். குற்றம் சாட்டப்பட்ட ஷாபி அவரிடம் வலுக்கட்டாயமாக தன் காதலை முன்மொழிந்தார், அதே நேரத்தில் ரஸா மெமன் அவரது உடல் குறித்து ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்து, அவரை முறையற்ற விதத்தில் தொட முயன்றார்.
9வது சம்பவம் (ஜனவரி 2026 - ஏப்ரல் 1, 2026):
குற்றம் சாட்டப்பட்டவர்களான ரஸா மெமன் மற்றும் ஷாருக்கான் குரேஷி ஆகியோர் பாதிக்கப்பட்டவருடன் ஆபாசமான உரையாடல்களில் ஈடுபட்டு, அருவருப்பான செயல்களில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர் மறுத்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறி, அவரைக் கண்காணிப்பில் வைத்து, அவரது உடல் குறித்து ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்து மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர்.
பாலியல் துன்புறுத்தல், உடல் ரீதியாக தொடுதல், பாலியல் ரீதியான பேச்சுகள், பணி சுமையை அதிகரித்து அழுத்தம் கொடுத்தல், மத மாற்றத்தை கட்டாயப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும். இதை தொடர்ந்து மும்பை போலீசார் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். முதலில் புகார் அளிக்க பயந்த பெண்கள், கைதுகள் நடந்த பிறகு தைரியமாக புகார் கூற முன்வந்தனர்.
ஏழு பேர் கைது
இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆறு ஆண்கள் மற்றும் ஒரு பெண் எச்ஆர் அதிகாரி அடங்குவர். இவர்களில் பலர் டீம் லீடர்கள் மற்றும் மூத்த ஊழியர்கள். கைது செய்யப்பட்ட ஹெச்.ஆர்., அதிகாரி நீடா கான், நிறுவனத்திற்குள் வந்த பாலியல் தொல்லை புகார்களை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நீடா கான் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரை தொழில்நுட்ப உதவியுடன் போலீஸ் தேடி வருகிறது. இந்தக் கைதுகள் ஒட்டுமொத்த மும்பையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நாசிக் அலுவலகத்தின் தற்போதைய நிலை
இந்தச் சம்பவத்தால் நாசிக் பிபிஓ அலுவலகத்தில் பணி நடவடிக்கைகள் பெருமளவு குறைந்துள்ளன. ஊழியர்கள் மிகக் குறைவாகவே வந்து செல்வதாக தெரிகிறது. அலுவலகத்துக்கு வெளியே அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இனி என்ன?
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் ஏப்ரல் 10 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் நீதிமன்றக் காவலில் உள்ளார். கைது செய்யப்பட்ட ஏழாவது நபரான ஹெச்.ஆர்., நீடா கான், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தொடர்பான விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கத் தவறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காவல் ஆணையர் சந்தீப் கர்னிக்கின் அறிவுறுத்தலின் பேரில், இந்த வழக்குகளை விசாரிக்க ஏசிபி (குற்றம்) சந்தீப் மிட்கே தலைமையிலான ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மற்ற பெண்களும் புகார் கூற முன்வர வேண்டும் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
நல்லா வேளை இஙகு அல்ல இப்போது இது நடந்துள்ளது நாசிக். நிச்சயம் இவன்ங்கள் உயிருடன் நடமாடுவது என்பது கேள்விக்குறி. இஙகு நுங்ம்பாக்கத்தில் இது பொஆன்று ஒரு மதவெறியன் ஒரு பிரேம்ந பெண்னை வசியம் செய்து அவள் வேலை செய்யும் கம்பெனி லப்டோபைல் அவள் குறியெண்ணெய் தெரிந்து ஐந்து கொண்டு ஹீவியா வாத பிரச்சாரத்தியும் செய்து அது தெரிய வர அவள் கோபமடைய கொலையும் செய்து நம் அரசின் காவல் துறை மெத்தனத்தால் தப்பித்தும் ஓடி விட்டான். ஆந்திரா போலீஸ் வேறு கே ஸுடன் அந்தமத வெறியனை ஒப்பிட்டு பார்த்து தூக்கிடிச்சி.
இந்த மதவெறியன்கள் திருந்துறை ஜென்மமில்லை. tick for TACK ட்ரெர்ட்மெண்ட்டி திருத்தும் இந்த மாதிரி மதவெறியை முண்டங்களை மயிலேயே மயிலேயே இறகு போடு என்று சட்டமெல்லாம் சொல்லி திருத்தமுடியாது திருந்துர ஜென்மில்லை.
இவர்களை தூக்கிலிடலாம்
பாஜக ஆளும் மாநிலத்திலேயே இந்த நிலை ......ஒருத்தனையும் விட கூடாது .... டாடா சந்திரசேகரன் வாய் திறப்பாரா ? அவருக்கு தெரியாம இருக்க லாம் வாய்ப்பே இல்லை ....இவரே இந்த கும்பலுக்கு துணை போகிறார்
இவர்களின் மக்கள்தொகை கூடும்பொழுது அடுத்த மதத்தினர் அமைதியாக வாழ விடுவதில்லை இத அணைத்து நாடுகளிலும் நிரூபணம் ஆகி உள்ளது ஆனால் இங்கு இருக்கும் சிலர் தான் முட்டு கொடுத்து கொண்டு உள்ளனர். அடுத்த தலைமுறைகள் பாவம்
Encounter All Such AntiNativePeople & AntiNation Terrorists
இது போன்ற சில இஸ்லாமிய தீவிரவாதிகளின் கீழ்த்தரமான நடவடிக்கையால், ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்துக்கே வேலை வாய்ப்பு பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. சமூக நல்லிணக்கம் என்று சொல்லி, இசுலாமிய சமூக வளர்ச்சிக்கு பாடுபடுவதாக நினைத்து, அந்த சமூகத்தை பற்றி தவறான எண்ணங்களை மக்களிடம் விதைத்து அந்த சமூகத்தின் வளர்ச்சியை இந்த செயல்பாடுகள் கெடுப்பதாகத்தான் உள்ளது.
அமைதியை கெடுக்கும் மார்க்கமாக உள்ளது.
If the world doesnt have Islam and the jihad portion in Kuran, World will live in love and peace.
லவ் ஜிகாத் என்பது இவர்கள் மதம் மாற்ற செய்யப்படும் உத்தி.மேலும்
-
பணத்தில் 'மிதக்கிறது' கோவை தேர்தல்: தேர்தல் கமிஷன் வேடிக்கை என குற்றச்சாட்டு
-
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 மதுபாட்டில்கள் பறிமுதல்
-
தயார் நிலையில் ஓட்டு சாவடிக்கு தேவையான பொருட்கள்
-
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
-
சூலூரில் பூத் சிலிப்புகள்: 90 சதவீதம் வினியோகம்
-
செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா