பீஹாரில் முதல் முறையாக முதல்வர் பதவியை கைப்பற்றியது பாஜ
பாட்னா: பீஹார் முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, 57, இன்று பதவியேற்றார். இதன் மூலம் பீஹாரின் முதல்வர் பதவியை பாஜ முறையாக கைப்பற்றியது.
பீஹார் முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் இருந்த நிலையில், ராஜ்யசபா எம்.பி.,யாக சமீபத்தில் பொறுப்பேற்றார். இதையடுத்து மாநில கவர்னர் சையத் அட்டா ஹஸ்னைனை சந்தித்து முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார்.
இதனால் பா.ஜ.,வைச் சேர்ந்தவரும் துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி, சட்டசபை கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, பீஹாரின் புதிய முதல்வராக அவர் இன்று பதவியேற்றார். பா.ஜ.,வைச் சேர்ந்த ஒருவர் பீஹார் முதல்வராக பதவி ஏற்று உள்ளது இதுவே முதன்முறை. ஜனதா தளத்தின் தலைவர் விஜய் குமார் சவுத்ரி துணை முதல்வராகப் பதவியேற்றார்.
யார் இந்த சாம்ராட் சவுத்ரி?
நிதிஷ் குமார் ஆட்சியில், துணை முதல்வராக இருந்தவர் சாம்ராட் சவுத்ரி. குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்த இவர், முதலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளத்திலும், அதன்பின் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திலும் இருந்துள்ளார். இறுதியாக, கடந்த 2017ல் பா.ஜ.,வில் இணைந்த அவர், 2023ல் அக்கட்சியின் மாநில தலைவராகவும் பொறுப்பேற்றார்.
'இனி, பீஹாரின் நிர்வாகப் பணிகளை புதிய அரசு கவனித்து கொள்ளும். இந்த புதிய அரசிற்கு என் முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் இருக்கும்' என நிதிஷ் குமார் உறுதி அளித்துள்ளார்.
2025 தேர்தலில் பிஜேபி அதிக சீட் பெற்ற கட்சி. 2020 தேர்தலில் பிஜேபி வென்ற தொகுதிகள் 74. நிதிஷ் குமார் வென்ற தொகுதிகள் 43. இருந்தாலும் JDU நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி நடந்தது. இப்போது நிதிஷ் குமார் அவருக்கு நினைவு மறதி மற்றும் வயது முதிர்ச்சி சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளதால் பிஜேபி அதிக சீட் பெற்ற கட்சி என்ற முறையில் கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது.
பிஜேபி அங்க இடத்தில உள்ள கட்சி
ஒரே ஒரு வார்த்தை குறுக்கு வழியில்!
தமிழகத்தில் அப்படி நடந்து பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன பிரச்சினை? திராவிஷ ரவுடிக் கும்பல் மேலும் ஆட்சி செய்தால் மிச்சம் மீதி இருக்கும் கனிம வளங்களும் சுரண்டப்படும். நமது வருங்கால சந்ததியினர் வாழ்வைப் பற்றி நாம் கண்டிப்பாக கவனம் கொள்ள வேண்டும்.
தமிழக தேர்தலில் என்.டி.எ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலும் இதுபோல் நடக்கும்,தமிழக மக்களே உஜார்
இந்த பார்முலாவை தமிழ்நாட்டில் நடத்த நம்ம எடப்பாடி உதவியுடன் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.. இதற்க்கு தமிழ்நாட்டில் சில பல புதிய அடிமைகள் கைகோத்திருக்கிறார்கள்.
சீனு, முதலில் திருட்டு திமுகவை விரட்டி அடிப்போம்..இதுவா தமிழக மக்களின் முடிவு
அதென்ன கைப்பற்றியது என்று தலைப்பு ? அதிக எம்எல்ஏ க்கள் ஆதரவு ஒருவருக்கு இருந்தால்தான் அவர் சிஎம் ஆகமுடியும் ......
எப்படி இங்கு 27 MLA க்கு நீங்கள் தேர்தல் போட்டி அனால் அதற்கு தேர்தல் அறிக்கை அப்படியா
ஒரு குடும்பம் மட்டும் பாரத தேசத்தில் ஆட்சி செய்ய வேண்டும் என்றால் அது அரசர் ஆட்சி. நல்ல நாள் அதுவும் எப்படி ஒரு எதிர்மறை எண்ணம்.
பீகார் மாநிலம் பற்றிய செய்தி இது. புதிய முதல்வரை வாழ்த்து சொல்லி நல்ல வார்த்தை சொல்லி பழகுங்கள். எங்கள் உண்மையான ஆயர் குலத்தவன் பரந்த உலகத்திக்கு கீதை சொன்னான்.
நீங்கள் அத்தனை தொலைவு செல்ல வேண்டாம்.
அண்ணன் எடப்பாடியார் அரசியலுக்கு நேற்று வரவில்லை. அவரும் ஜெய்க்கட்டும். வாழ்த்து சொல்லுவோம்.
மக்கள் தீர்ப்பு மகேஷன் தீர்ப்பு. நிஜமாகவே அனைவருக்குமான முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.
பழனிசாமிக்கு இதே கதி ஏற்பாடாது ஏன் எனில் அவர் வெற்றி பெற போவதில்லை ஆனால் கட்சி கபளீகரம் செய்யப்படும்
ஆகூர் , முதலில் திருட்டு திமுகவை விரட்டுவோம்...பின்னர் இதை நாங்கள் பார்த்துகொள்கிறோம்...உனக்கு கவலை வேண்டாம்
ஏன் இப்படி திமுகவுக்கு ஜால்றா அடிக்கிறாயோ ஆகுயர்த்தோன் அவர்களே?மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்