தொகுதி மறுவரையறை: தமிழகத்தில் நாளை கருப்புக் கொடி போராட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை (ஏப்ரல் 16) நடக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: உயரட்டும் கருப்புக்கொடி; தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும்; இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா? மத்திய பாஜ அரசு நாளை பார்லிமென்டில் கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் தமிழகத்துக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதி.
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பாஜ. தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழகத்தின் குரலை மதித்து மத்திய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும். திமுக தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் வீடியோ
தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து வீடியோ ஒன்றையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
கருப்பு கொடியைத்தவிர வேறு நிற கொடியே தெரியாதா இவருக்கு கட்சியே கருப்பாக போய்விட்டதே அந்தக்கோ எப்போதுதான் வேறு நிறத்திற்கு திரும்பும்? இவர்மட்டும் ஏசியில் எப்போதும் உட்கார்ந்து வெளுப்பு நிறமாகி அடுத்தவர்களை கருப்புநிறத்தில் உழைக்க சொல்கிறாரே
கிழித்து தள்ளி விடுவார் இவர்.
வின்னர் பட வசனம் , வடிவேலு சொல்லுவார் , தம்பி இது ரத்த பூமி ,பார்த்தேல்ல , ஆனாலும் அவரை போட்டு அடி பின்னிடுவானுங்க , ஏன்டா ஒரு எதுகை மோனையா பேசினேன் அதுக்கு போய் இப்படி அடிக்கிறீங்களேடா
பொருளாதாரப் பங்களிப்புக்கு ஏற்ப வரிப் பகிர்வில் நியாயம் கிடைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்கிறார். அப்படியானால் தமிழகத்தில் கொங்கு மண்டலம் பொருளாதார பங்களிப்பில் முதலிடத்தில் இருக்கு ஆனால் தமிழக அரசிடமிருந்து கோவைக்கு எந்த சலுகையும் இல்லையே.
உருப்படியா ஒரு வேலையாவது செய்து இருக்கிறாயா
1963-ல் இருந்து 1965 வரை திமுக மாணவர்களை வைத்து இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தியது. மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள். சில வன்முறை சம்பவங்களும் நடைபெற்றது. அந்த நேரம் இருந்த தமிழக முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்கள் மாணவர்கள் போராட்டத்தை சுமுகமாக கையாளத் தெரியவில்லை. சிலர் உணர்ச்சி பெருக்கால் தீக்குளித்தனர். அரிசி பஞ்சம் தலைவிரித்து ஆடியது. திமுக தலைவர் அண்ணாதுரை அரிசி பஞ்சத்தையும் இந்தி எதிர்ப்பு மாணவர்கள் போராட்டத்தையும் திமுகவுக்கு சாதகமாக கையாண்டு அதில் வெற்றி பெற்று 1967 இல் திமுக ஆட்சி வந்தது அவர் கொடுத்த முக்கியமான வாக்குறுதி மூன்று படி அரிசி ரூபாய் ஒன்றுக்கு தருவதாகவும் இல்லையென்றால் எங்களை முச்சந்தியில்நிறுத்தி சவுக்கால் அடியில் என்று சொன்னார். அப்புறம் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். மூன்று படி அரிசி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்று வாக்குறுதியை மாற்றிக்கொண்டார். அன்று மாணவர்கள் நடத்தியது உணர்ச்சிகரமான இந்தி எதிர்ப்பு போராட்டம்.. ஆனால் இன்றைய காலகட்டத்தில் 70 சதவீதத்திற்கு மேல் உள்ள மாணவ மாணவிகள் இந்தியை படித்து வருகிறார்கள் முதல்வரின் குடும்பம் திமுகவினர் தனியார்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தியை சொல்லிக் கொடுக்கிறார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தான் இந்தி படிக்கவில்லை. இன்று இந்தி படிப்பதில் மாணவ மாணவிகள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் அதனால் தான் பராசக் தீ தமிழ்நாட்டில் பரவவில்லை. அதேபோலத்தான் முதல்வர் அறிவித்துள்ள தொகுதிமறு வரை போராட்டம். பிரதமர் மோடி ஸ்டாலினை எச்சரிக்கைகளுக்கு எல்லாம் பயப்பட மாட்டார். தொகுதி மறுவரையறையினால் மக்களுக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. இதுவும் இந்தி எதிர்ப்பு போராட்டம் இப்போது உள்ளது போல் கண்டிப்பாக புஸ்வானம் ஆகிவிடும்.
கொங்கு மண்டலத்தை தமிழகத்திலிருந்து தனியாக பிரிக்க வேண்டும்.
பெண்கள் அதிக அளவு MP ஆக வந்தால் ஊழல் குறையும். இது ஆணாதிக்க கட்சிகளுக்கு மிக பெரிய பயமாக உள்ளது. அது தவிர பெண்களுக்கு எதிரான அசிங்கமான பேச்சு, சட்டம் ஒழுங்கு மோசம் என்ற நிலை, பெண்களுக்கு எதிரான டாஸ்மாக், போதை, வன்முறை போன்றவை சில கட்சிகளுக்கு பெண்கள் ஓட்டையும், பெண்கள் MP கள் வெற்றியையையும் தராது என்பதால் மிக பெரிய எதிர்ப்பு செயற்கையாக உருவாக்கப்படுகிறது.
வீட்ல கறுப்புக்கொடி ஏற்ற மாட்டோம். வேணும்னா காவிக்கொடி ஏற்றுகிறோம். இது எப்படி இருக்கு? ஹி ஹி
அதுக்காக பார்லிமென்ட் கூட்டத்தையே புறக்கணிக்க உத்தரவிட வேண்டாமே. ஓசி டிபன் வாய்ப்பைக் கெடுக்க வேண்டாம். இப்படிக்கு டீம்கே எம்டி உறுப்பினர்கள்.மேலும்
-
செய்தி எதிரொலி சவுடு மண் கடத்தினால் 'குண்டாஸ்' கலெக்டர் பிரதாப் எச்சரிக்கை
-
தேசிய அளவிலான வில்வித்தை போட்டி முதலிடம் பிடித்த பொன்னேரி மாணவி
-
பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி
-
விபத்தால் மனமுடைந்தவர் தற்கொலை
-
முத்துக்கொண்டாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு காண கோரிக்கை
-
பிரசாரத்தில் சீமான் முதலிடம்!