தேர்தலை முன்னிட்டு 3 நாள் மதுக்கடை மூடல்

திருப்பூர்: கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:


சட்டசபை தேர்தல், வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் மதுக்கடைகள், மன மகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் கூடிய பார்கள், வரும் 21 ம் தேதி காலை, 10:00 மணி முதல், ஓட்டுப்பதிவு நாளான 23ம் தேதி, நள்ளிரவு 12:00 மணி வரை மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதி ஆகிய நாட்கள் மூடப்பட்டு, விற்பனை நிறுத்தம் செய்யப்படுகிறது.

தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Advertisement