போலீஸ் செய்திகள்:பெட்ரோல் குண்டுவீச்சு

சோழவந்தான்: பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி 48, தி.மு.க., கிளைச் செயலாளர். இவரது மகன் கோபிநாத் 21, இவரது நடவடிக்கை சரியில்லாததால் தந்தை கண்டித்தார். இதனால் 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் நண்பர்களுடன் சேர்ந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடு, மினிசரக்கு வேனை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டார். போலீசார் வருவது தெரிந்தவுடன் தப்பினர்.

(ஏப்.15) இரவு 1:30 மணிக்கு அய்யனார் 20, தினேஷ்குமார் 19, முத்துக்கருப்பு 20 ஆகியோருடன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினார். பெட்ரோல் குண்டு ரோட்டில் விழுந்ததால் சேதம் ஏற்படவில்லை. சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement