பஞ்சாப் தேர்தலுக்கு மத்திய அரசு தயார்: கெஜ்ரிவால் கிண்டல்

புதுடில்லி, பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான், முதல்வராக உள்ளார். அந்த மாநிலத்தில், 2022 மார்ச் மாதம் முதல், அவர் தலைமையிலான அரசு உள்ளது. அவரின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு வரை உள்ளது.

இந்நிலையில், அமலாக்க துறை யினரால், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த, ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் அசோக்குமார் மிட்டலுக்கு சொந்தமான, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அதை, கிண்டல் செய்யும் நோக்கில், ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் கெஜ்ரிவால் கூறும் போது, 'மத்திய அரசின் அமலாக்க துறையினரை வைத்து, ஆம் ஆத்மி கட்சியின் அசோக்குமார் மிட்டலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

'இதை வைத்து பார்க்கும் போது, பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கு மத்திய, பா.ஜ., அரசு தயாராகி விட்டது என்பது தெளிவாகிறது' என, கிண்டலாக கூறியுள்ளார்.

Advertisement