தி.மு.க., நிர்வாகி வீட்டில் வேட்டி, சேலை பறிமுதல்

வடமதுரை: வாக்காளர்களுக்கு வழங்க, தி.மு.க., நிர்வாகி வீட்டில் பதுக்கப் பட்டிருந்த வேட்டி, சேலைகளை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை, ஏ.வி.பட்டியில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய, தி.மு.க., நகர துணை செயலர் வீரமணி வீட்டில், பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

தேர்தல் பறக்கும் படை அலுவலர் லோகேந்திரன் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் இரவு, வீரமணி வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைத்திருந்த, 197 வேட்டி, 120 சேலைகளை பறிமுதல் செய்தனர். இதை, வேடசந்துார் தொகுதி, தேர்தல் உதவி அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.

Advertisement