திருமணமான 21 நாளில் புதுப்பெண் தற்கொலை

தொப்பூர்: நல்லம்பள்ளி அருகே, திருமணமான, 21 நாளில் புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள சொரங்கப்பன்-புதுார் கிராமத்தை சேர்ந்தவர் அருள்முருகன், 25. இவர், கொண்-டகரஹள்ளியை சேர்ந்த புவனேஷ்வரி, 20, என்பவரை கடந்த மார்ச், 25 அன்று திருமணம் செய்து கொண்டார்.

இதில், தம்பதிக்குள் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்று முன்தினம் மதியம், 1:30 மணிக்கு புவனேஷ்வரி வீட்டின் படுக்கையறையில் இருந்த பேனில், துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்-றனர்.

Advertisement