போலீஸ் செய்தி: மூதாட்டிக்கு தொந்தரவு தப்பி ஓடியவர் கைது

தளவாய்புரம்

தளவாய்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 70, வயது மூதாட்டி கண்மாயில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த புத்துார் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மாரிமுத்து 30, மூதாட்டி இடம் தண்ணீர் கேட்டு குடித்துவிட்டு கீழே தள்ளி பாலியல் ரீதியாக பலவந்தம் செய்து தப்பினார். மாரியப்பனை தளவாய்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

மெக்கானிக் சாவு,

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே தொட்டியபட்டியை சேர்ந்த அங்குசாமி 25, மெக்கானிக். மதுரை ரோட்டில் முனீஸ்வரன் நடத்தி வரும் மெக்கானிக் ஷாப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார். வழக்கமாக நேற்று காலை கடையை திறந்து பார்த்தபோது அங்குசாமி இறந்த நிலையில் கிடந்தார். ் வடக்கு போலீசார் இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement