அண்ணாமலை கூட்டத்திற்கு வந்து சென்ற முதியவர் பலி

முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் அண்ணாமலை பிரசாரத்திற்கு வந்த சென்ற முதியவர் மயக்கமடைந்து உயிரிழந்தார்.

முதுகுளத்துார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மலேசியா பாண்டியை ஆதரித்து பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அங்கு பிரசாரம் செய்தார். இதை காண கமுதி புதுக்கோட்டையை சேர்ந்த மலேசியா பாண்டியின் ஆதரவாளர் வேலாயுதம் 80, குடும்பத்துடன் வந்தார். பிரசாரம் முடிந்ததும் தனது வாகனத்தை நிறுத்தியிருந்த முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலகம் அருகே நடந்து சென்றார். வெயிலில் நடந்தபோது அவர் மயக்கமடைந்தார். முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், வேலாயுதம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். முதுகுளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement