பழுதடைந்த மின்கம்பம் மாற்றம்

எஸ்.புதுார்:எஸ்.புதுாரில் பழுதடைந்த மின்கம்பம் தினமலர் செய்தி எதிரொலியாக மாற்றப்பட்டது.

இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மின்கம்பம் உருக்குலைந்து, கான்கிரீட் கம்பி தெரியும் நிலையில் இருந்தது. மழைக்காலங்களில் மின்கம்பத்தில் மின்சாரம் பாய்வதாகவும், காற்றடிக்கும் நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். இது குறித்து தினமலரில் ஏப். 15 ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று மின்வாரிய அதிகாரிகள் பழைய மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பத்தை அமைத்தனர்.

Advertisement