தலையில் விழுந்த குடம்: நனைந்த தி.மு.க., நிர்வாகிகள்

கொரட்டூர் பேருந்து நிலையத்தில், தி.மு.க.,வினர் 50க்கும் மேற்பட்டோர் இணைந்து, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள, தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மசோதாவின் நகலை தீயிட்டு கொளுத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து அணைக்க முயன்றனர்.

அப்போது தி.மு.க.,வினர் போலீசாருக்கு வழிவிடாததால், தலைக்கு மேல் குடத்தை துாக்கி பிடித்து, தண்ணீரை கீழே ஊற்றினர். அப்போது போலீஸ்காரரின் கையில் இருந்த தண்ணீர் குடம் நழுவி, தி.மு.க., நிர்வாகியின் தலையில் விழுந்தது. இதனால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைத்து, 'எவன் டா மேல தண்ணீய ஊத்துனது' என குரலெழுப்பினர்.

பின், போலீஸ்காரரின் கையில் இருந்து குடம் தவறி விழுந்தது என தெரிந்ததும், ஏதும் பேசாமல் கலைந்து சென்றனர்.

Advertisement