பா.ஜ., வியூகத்தில் சிக்கிய தி.மு.க.,
-நமது நிருபர்-
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடியேற்றி, தொகுதி மறுவரையறை திட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நடப்பது சட்டசபை தேர்தல். ஆனால், லோக்சபா தொகுதி மறுவரையறையை ஓர் ஆயுதமாக தன் கையில் திமுக எடுத்திருக்கிறது
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் பிரசாரம் எடுபடும் அளவிற்கு முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் எடுபடவில்லை என தி.மு.க., வின் வியூக வகுப்பு குழு கொடுத்திருந்த அறிக்கையால், பிரசாரத்தை தீவிரப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த திமுகவிற்கு , லட்டு போல தொகுதி மறுவரையறை விஷயத்தை கொடுத்தது பாஜ.,
அதற்கான மசோதா நேற்று தாக்கலாகும் என்ற தகவல் முதலில் வெளியான உடனேயே, ‛தமிழகத்தை பாதிக்கும் படியோ வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமை கூட்டும்படியோ, தொகுதி வரையறை நடந்தால், சும்மா இருக்கமாட்டோம். தமிழகம் தன் எதிர்ப்பை கடுமையாக காட்டும். இதுவரை பார்க்காத தமிழகத்தை பார்க்கவேண்டியிருக்கும். பழைய தி.மு.க., வை மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும் ' என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து தொகுதி மறுவரையறை என்பது , சொந்த நாட்டிலேயே தமிழர்களை அகதிகளாக மாற்றும் கருப்புச்சட்டம் என கூறி, தமிழகம் முழுவதும் நேற்று, தி.மு.க.வினர் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொகுதி வரையறை தி்ட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தினர். ஆனால் அது பெரிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படியாக நடக்கவில்லை. அடையாள அளவிலேயே நடந்தது. வாக்காளர்களின் கவனத்தையும் ஈர்க்க தவறிவிட்டது.
தொகுதி வரையறை என்பது, புரிந்து கொள்வதற்கு சற்று கடினமான விஷயம் என்பதால், பிரசாரம் செய்யக்கூடிய அடுத்த 5 நாட்களில் திமுக அதை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்லும் என்பது கேள்வக்குறியாக உள்ளது.
பா.ஜ.,வும் இதில் அரசியல் ஆட்டம் ஆடுகிறது. இந்த மசோதா விஷயத்தை சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ளவே இந்த நேரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்கள் இடஒதுக்கீடு மசோதா 2023லேயே சட்டமாகிவிட்டது.
ஆனால் அதை செயல்படுத்த தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும. அதற்காகத்தான் தொகுதி மறுவரையறை செய்கிறோம் என்று பா.ஜ., பேசி வருகிறது. தொகுதி மறுவரையறை என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டாயம் என்பதை பேசவில்லை.
இந்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு பாஜவிடம் இல்லை. இது பற்றி கடந்த 4ம் தேதி காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான ப.சிதம்பரம், ‛தொகுதி மறுவரையறையுடன் மகளிர் இடஒதுக்கீடு அளிக்கும் அரசமைப்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றும் அளவுக்கு லோக்சபா, ராஜ்யசபாவில் பாஜவுக்கு பெரும்பான்மை இல்லை, தமிழகம் மேற்கு வங்கத்தில் 67 லோக்சபா எம்பிகளும், 25 ராஜ்யசபா எம்பிகளும் பாஜவுக்கு எதிராக உள்ளனர். இவர்கள் மசோதாவுக்கு எதிராக ஓட்டு போட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, இந்த இரு மாநிலங்களிலும் தேர்தல் நடக்கும் நேரத்தில், பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளனர்' என்றார்.
மசோதா நிறைவேறினால் நலன். ஒருவேளை மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்றால், ‛பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை எதிர்க்கட்சிகள் தடுத்து விட்டன'என்று பிரசாரம் செய்யலாம் என்பதே பா.ஜ., வின் திட்டம். மேற்கு வங்க தேர்தலை குறிவைத்தே பா.ஜ., இதை செய்துள்ளதாக கூறப்படுகிறது
அதற்கேற்ப பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி இது குறித்து, காங்கிரஸ், தி.மு.க., போன்ற கட்சிகள் ஆண் வாரிசைத்தான் அதிகார மேடையில் அமர்த்துகின்றன. பார்லிமென்டும் சட்டசபைகளும் பெண்களால் நிறைந்திருப்பதை அவர்கள் விரும்பவில்லை. பெண்கள் இட ஒதுக்கீட்டை நேரிடையாக எதிர்க்க முடியாது என்பதால், தொகுதி வரையறை என்ற பெயரில் எதிர்க்கின்றனர்' என்றார்.
மேலும் தொகுதி வரையறையால் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்று மோடியும் அமித்ஷாவும் உறுதி அளித்துள்ளனர். அதன் பின்னரும் தமிழகத்திற்கான லோக்சபா தொகுதிகள் குறையும் எனக்கூறி பதற்றத்தை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார். தேர்தலுக்கு சில நாட்களே இருப்பதால் இதை வைத்து கட்டுக்கதை பரப்பி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று நினைக்கிறார. தமிழக மக்கள் புத்திசாலிகள் என்பதால் திமுகவின் விஷம பிரசாரம் ஒரு நாளும் எடுபடாது என்று அவர் கூறினார்.
லோக்சபாவில் நேற்று, தொகுதி வரையறை சட்ட மசோதா மீதான விவாதத்தில் பேசிய மோடி, ‛மகளிர் இட ஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயம். தங்களுக்கான உரிமையை தடுப்பவர்களை பெண்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். இந்த மசோதா நிறைவேறினால் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைத்து விடும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்ற.மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறினால் , அதன் பெருமையை எதிர்க்கட்சிகளே எடுத்துக் கொள்ளட்டும். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் .
தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது. இதையெல்லாம் திரும்பத் திரும்பச் சொன்ன பின்பும், சிலர் மசோதாவை எதிர்க்கின்றனர். இதனால் பாஜவுக்கு இருந்த திருஷ்டி கழிந்துவிட்டது என்று தொகுதி மறுவரையறை பெண்கள் இடஒதுக்கீட்டுடன் தொடர்பு படுத்திதான் பேசினார்.ஆனாலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்று இதை எதிர்க்கின்றன
தமிழகத்திற்கான தொகுதிகள் குறைந்துவிடும் என்று திமுக அதை அரசியல் ஆக்குகிறது. மகளிர் இட ஒக்கீட்டை தடுக்க காங்கிரஸ், திமுக சதி செய்வதாக பா.ஜ., குற்றம்சாட்டுகிறது.
பா.ஜ., செய்த வியூகத்தில் எதிர்க்கட்சிகள் சிக்கி கொண்டது போல் தான் தெரிகிறது.
பாஜவின் திட்டம் எதுவாக இருந்தாலும், தேர்தல் நேரத்தில் இந்த பிரச்னையா என கூட்டணியில் உள்ள அதிமுக தவித்து நிற்கிறது. தொகுதி வரையறையை வரவேற்றால் அதை வைத்து திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்து ஓட்டுகளை திருப்பலாம். எதிர்த்தால் கூட்டணி கட்சியான பா.ஜவின் நிலைப்பாட்டுக்கு எதிராக போகும் என்பதால் இந்த விஷயங்களில் தன் நேரிடையான கருத்துக்களை சொல்லாமல் நழுவுகிறார் பழனிசாமி. இது பற்றி அமித் ஷாவிடம் அவசரம் அவசரமாக பேசியதாக கூறப்படுகிறது.
பிரதமரும், உள்த்துறை அமைச்சரும் நேற்று பார்லியில் விளக்கம் அளித்த பின் தமிழகத்திற்கு தொகுதி ரீதியாக எந்த குறையும் வராது என்ற தோற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மசோதாவிற்கு எதிரான பிரசாரத்தை தொடரலாமா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் தி.மு.க., இருக்கிறது.
வாசகர் கருத்து (21)
விருமாண்டி - Benaras,இந்தியா
17 ஏப்,2026 - 22:45 Report Abuse
நிச்சயம் தோற்கும் என்று தெரிந்தே பாஜகவால் கொண்டு வரப்பட்ட இதில் அதிமுக தான் சிக்கி சின்னாபின்னம் ஆகிறது. தமிழ்நாட்டுக்கு எதிரான தொகுதி மறுவரை மசோதாவை எதிர்க்க துணிவில்லாத கோழை தவழபாடி என்று மீதமுள்ள 5 நாட்களும் பிரச்சாரத்தை தொடரும் திமுக அணி். பாஜகவின் இந்த வியூகம் அதிமுகவை மொத்தமாக அழிக்கத் தான். திமுக சாதுர்யமாக தனக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டது. பாஜகவும் அதிமுகவோட சேர்ந்து துடைத்து எறியப்படும். 0
0
Reply
rajasekar jayaraman - ,
17 ஏப்,2026 - 20:13 Report Abuse
இப்போது தோற்றது எதிர் கட்சிகள் தான் மத்திய அரசு இல்லை. 2026 தேர்தலில் அதற்குண்டான பலனை அறுவடை செய்வார் ஸ்டாலின். 0
0
விருமாண்டி - Benaras,இந்தியா
17 ஏப்,2026 - 22:36Report Abuse
குப்புற விழுந்த பாஜக மீசையிலே மண்ணு ஒட்டல்லை. குழந்தை சாகும்ன்னு தெரிஞ்சே குறை மாதத்தில் வயித்தை கிழிச்சது பாஜக. அரசியல் ஸ்கோர் திமுக 100, பாஜக 0, அதிமுக மைனஸ் 100. 0
0
Reply
பாரதி - ,
17 ஏப்,2026 - 15:35 Report Abuse
மக்களுக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை எல்லாம் தடுக்கும் திமுக கூட்டம் அடியோடு நாசமாக வேண்டும் அப்பொழுதுதான் நாடு நன்றாக இருக்கும் 0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
17 ஏப்,2026 - 12:32 Report Abuse
திமுக பெண்களுக்கு எதிரான கட்சி என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது தமிழக பெண்கள் NDA க்கு வாக்களிக்க தயார் ஆகி விட்டார்கள் இதில் திமுக போலவே பேசி த வெ க வும் மாட்டி கொண்டது 0
0
Reply
venugopal s - ,
17 ஏப்,2026 - 11:38 Report Abuse
திமுகவின் மிரட்டலைக் கண்டு பயந்து போய் விட்டது பாஜக! 0
0
கருத்து கந்தசாமி - ,
17 ஏப்,2026 - 11:57Report Abuse
ஆமாம் எங்கள் கறுப்பு சிவப்பு காமெடி ராணுவத்திற்கு முன்பு யார் என்ன செய்ய முடியும்? எதிரி அணுகுண்டே போட்டாலும் அதைப் பாய்ந்து கையாலே பிடிப்பார் எங்க ஸ்டாலின் 0
0
vivek - ,
17 ஏப்,2026 - 12:48Report Abuse
வேணு வாங்கிய அடி அப்படி...அதுதான் இந்த உளறல் 0
0
guna - ,
17 ஏப்,2026 - 17:43Report Abuse
ஆமாம் வேணு. அந்த பிரேமலதா பேசிய தலைப்பில் உன்னை காணவில்லையே..எங்கே ஓடிவிட்டாய் 0
0
rajasekar jayaraman - ,
17 ஏப்,2026 - 20:17Report Abuse
வெற்றியில் தோல்வி இந்தி கூட்டணிக்கு தோல்வியில் வெற்றி மத்திய அரசுக்கு விரித்த வலையில் விழுந்த அறிவற்றகள். 0
0
Reply
Against traitors - Chennai,இந்தியா
17 ஏப்,2026 - 11:07 Report Abuse
இவனுங்க என்ன கதறினாலும் கும்முடிப்பூண்டிவரைதான். ஸ்டாலின் கருப்புக்கொடி காட்டினார்ன்னு டீ ர் பாலு சொன்னதுக்கு எந்த கலர் ஆனா இங்கு அது எடுபடாதுன்னு சபாநாயகர் சொல்ல கப்பல் திருடர் டவுன் ஆயிட்டார் 0
0
கணேசன் எஸ் - ,
17 ஏப்,2026 - 12:13Report Abuse
தொகுதிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்வதால் உட்கட்சி பூசல்கள் குறையும் 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
17 ஏப்,2026 - 10:16 Report Abuse
வானதி சொல்வது சரி. கனிமொழிக்கு என்றுமே முதல்வர் பதவி கிடைக்காது. உதயநிதி இன்பநிதி போன்ற ஆணாதிக்க திராவிடர்கள் தான் முதல்வராக முடியும். திருடர் கட்சியில் என்றுமே ஒரு பெண் முதல்வராகவே முடியாது. பெண்களுக்கு அவமரியாதை செய்யும்.கட்சி திருடர் கட்சி 0
0
Reply
சூர்யா - ,
17 ஏப்,2026 - 08:54 Report Abuse
இவரு கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்னு ஆரம்பிச்சார். எப்போதும் கறுப்பு சட்டை போடும் தி.கவினர் கூட நேத்து கறுப்பு சட்ட போடல. இவ்வளவு ஏன் கறுப்பு கலர்ல எப்போதும் சுற்றித்திரியும் காக்காவக் கூட நேத்திக்கு காணோம். அவ்வளவு மரியாதை ஸ்டாலின் சொல்லுக்கு. 0
0
Reply
PVSR - ,
17 ஏப்,2026 - 07:22 Report Abuse
திமுகவின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு பயந்து போய் மத்திய அரசு தமிழ நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராது மாறாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது எனவே இதை திமுகவின் வெற்றி என்று கூறுவர் 0
0
Reply
SUBBU,MADURAI - ,
17 ஏப்,2026 - 05:50 Report Abuse
இந்த தொகுதி மறுவரையறை சட்டத்தை எதிர்த்து தமிழக மக்களும் எதிர்ப்பைக் காட்ட தங்கள் வீடுகளிலும் கறுப்புக் கொடியை ஏற்ற வேண்டும் என்று ஸ்டாலினும் ஆக்ரோஷமாக அறிக்கை விட்டு ஏதோ பேப்பரை எதிர்த்து
கறுப்புக் கொடியை ஏற்றினார்.
ஆனால் அவரது இந்த கோரிக்கையை திமுகவினரே சட்டை பண்ணவில்லை ஏதோ பெயருக்கு ஒரு ஏழெட்டு அமைச்சர்கள் ஊடகங்களில் சீன் காண்பிப்பதற்காக தங்கள் வீடு மற்றும் கட்சி அலுவலகங்களில் கறுப்புக் கொடியை ஏற்றினார்கள். ஆனால் தமிழக மக்கள் ஸ்டாலினின் கோரிக்கையை கொஞ்சம் கூட கண்டுகொள்ள வில்லை. எனவே திமுகவின் இந்த கறுப்புக்கொடி போராட்டம் பிசுபிசுத்துப் போய் விட்டது. திமுகவினர் பிடுங்கும் ஆணிகள் அனைத்தும் தேவை இல்லாதவையாகவே ஆகிக் கொண்டிருக்கிறது. 0
0
Pathmanaban - Bangalore,இந்தியா
17 ஏப்,2026 - 07:32Report Abuse
திமுக பிடுங்கும் ஆணியில் உன்னுடைய நலனும் சேர்ந்துள்ளதை மறக்காதே 0
0
vivek - ,
17 ஏப்,2026 - 08:02Report Abuse
ஆணி அண்ணன் அப்படி என்ன நலன் விளக்குங்கள் 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
இன்னும் 4 நாட்கள் தான்; அனல் பறக்கும் அரசியல் கள செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்
-
மாட்டில் பால் எங்கிருந்து வருகிறது என்பது கூட முதல்வருக்கு தெரியாது: பா.ஜ., அண்ணாமலை விமர்சனம்
-
குமரியில் நாளை ராகுல் பிரசாரம்
-
ஸ்டாலின் வெல்லட்டும் நாடு சுடுகாடாகட்டும்: நா.த.க., சீமான் சாபம்
-
ஓடும் பஸ்சில் மாரடைப்பு: 50 பயணிகளை காப்பாற்றி தனியார் பஸ் டிரைவர் மரணம்
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் வெற்றி ஐ.ஏ.எஸ்., மாணவர்கள் சாதனை
Advertisement
Advertisement