தேர்தல் பணி அலுவலர்களுக்கு இன்று முதல் தபால் ஓட்டுப்பதிவு
திருப்பூர்: தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு, இன்று முதல் வரும் 20ம் தேதி வரை நடைபெறுகிறது.
மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் இதர துறை சார்ந்த அலுவலர்களுக்கு, 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை தபால் ஓட்டுப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தேதியில் மாற்றம் செய்யப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான தபால் ஓட்டுபதிவு, 17ம் தேதி முதல் (இன்று முதல்), வரும்20ம் தேதி வரை நடைபெறும்.
தாராபுரத்தில், ஆர்.டி.ஓ., அலுவலகம், காங்கயத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அவிநாசியில் தாலுகா அலுவலகம், திருப்பூர் வடக்கு தொகுதியில், 15 வேலம்பாளையத்திலுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம், திருப்பூர் தெற்கு தொகுதியில், டவுன்ஹால், பல்லடத்தில், தாலுகா அலுவலகம், உடுமலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம், மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில், தபால் ஓட்டு பதிவு நடைபெறும்.
மேலும்
-
இன்னும் 4 நாட்கள் தான்; அனல் பறக்கும் அரசியல் கள செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்
-
மாட்டில் பால் எங்கிருந்து வருகிறது என்பது கூட முதல்வருக்கு தெரியாது: பா.ஜ., அண்ணாமலை விமர்சனம்
-
குமரியில் நாளை ராகுல் பிரசாரம்
-
ஸ்டாலின் வெல்லட்டும் நாடு சுடுகாடாகட்டும்: நா.த.க., சீமான் சாபம்
-
ஓடும் பஸ்சில் மாரடைப்பு: 50 பயணிகளை காப்பாற்றி தனியார் பஸ் டிரைவர் மரணம்
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் வெற்றி ஐ.ஏ.எஸ்., மாணவர்கள் சாதனை