பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் 'ரோடு ஷோ'
அவிநாசி: அவிநாசி தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக, இறுதி கட்ட பிரசாரத்தில், ம.பி. முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்று 'ரோடு ஷோ' நடத்தி, பிரசாரம் செய்தார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி தொகுதியில் போட்டியிடும், பா.ஜ. வேட்பாளர் முருகனை ஆதரித்து, அவிநாசியில் நேற்று மாலை 'ரோடு ஷோ' நடந்தது. இதில், ம.பி. மாநில முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்று முருகனுக்கு ஆதரவு திரட்டினார்.
பிரசாரத்தில், மோகன் யாதவ் பேசியதாவது: அவிநாசி என்னும் புனித பூமியில் தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன். அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணி எழுச்சி பெற்றுள்ளது. தேசிய ஜனநாய கூட்டணியில் மட்டும் தான், சாதாரண மக்களும் அமைச்சராகவோ, முதல்வராகவோ, பிரதமராகவோ வர முடியும். ஆனால், தி.மு.க.வில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும்.
பிரதமர் மோடி, பெண்களுக்காக கொண்டு வந்த இட ஒதுக்கீடு சட்டத்தை தி.மு.க.வினர் தடுத்துள்ளனர். அவிநாசி கோவில் வாசலில் இருந்து சொல்கிறேன். நமது பாரம்பரியம், கலாசாரம் கோவில்களில் தான் உள்ளது.
ஆனால், தி.மு.க. கோவில்களுக்கு எதிராகவும், சனாதனத்திற்கு எதிராக உள்ளது. தி.மு.க. எதுவும் செய்ய வாய்ப்பு உள்ளது. தி.மு.க.வும், கூட்டணி வைத்துள்ள காங்கிரசும் ஆன்மிகத்துக்கு எதிரானவர்கள். முருகன் வெற்றியை உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவு கட்ட பிரசாரத்தில் வேட்பாளர் முருகன் பேசுகையில், ''தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பும் நேரம் இது. ஊழல், லஞ்சம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, பழனிசாமியை முதல்வராக அமர வைக்க வேண்டிய நேரம் இது. தமிழகத்தில் நிலவும் இப்பிரச்னைகளுக்கு பழனிசாமி முற்றுப்புள்ளி வைப்பார். இரட்டை இன்ஜின் ஆட்சி வந்தால், வளர்ச்சிப் பணிகள் வேகமெடுக்கும்.
போதை பொருள் மூலம் ஈட்டிய பாவ பணத்தில் தி.மு.க. தேர்தலை சந்திக்கிறது. இந்த பணத்தை அவிநாசியில் வீடு வீடாக கொடுத்து வருகிறார்கள். அவிநாசியில் 20 ஆயிரம் பேருக்கு வீடு தேவை. அவற்றை நிச்சயம் பெற்றுத் தருகிறேன். அவிநாசி கோவில் வாசலில் இருந்து சொல்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு வீடு கொடுத்தே தீருவோம்,' என்றார்.
பிரசார நிறைவு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. - பா.ஜ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். முன்னதாக, புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய 'ரோடு ஷோ' தேர் நிலையம் அருகில் நிறைவடைந்தது.
பிரதமர் மோடி சொன்னாலே பாஜகவுக்கு ஓட்டுப் போடாத தமிழக மக்கள் இவர் சொல்லியா போடப் போகிறார்கள்?
ஓ, இவர் தான் மத்தியப் பிரதேச முதல்வரா? சொல்லவே இல்லை!
முருகன் அவர் தயவில் MP ஆனார் ஆகவே அவருக்கு ஆதரவு
மிக சரியாக சொன்னீர்கள்.. இவர்கள் எல்லாம் வெறும் வாய் பேசும் சங்கிகள்.
விடியலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தமிழ் நாட்டுக்கு வருகை தந்துள்ள பீகார் RJD தலைவரை வரவேற்று விடியல் அறிக்கை .....பாவம் விடியலுக்கு வடக்கனுங்க ஆதரவு தேட வேண்டிய நிலைமை ...
மா பி , உபி , கா பி இல் இருந்து எல்லாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
உண்மைதான் .....பீஹாரிலிருந்து விடியலுக்கு பிரச்சாரம் செய்ய அங்கிருந்து RJD தலைவர் மேட்டுப்பாளையம் வருகை ....என்னத்த சொல்றது ..
இருபது வருடங்கள் தொடர்ந்து பிஜேபி ஆளும் மத்திய பிரதேசம் எல்லா வகையிலும் தமிழ் நாட்டை விட பின் தங்கி உள்ளது
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது அங்கே அப்படியே பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடியது ....இப்போது அதெல்லாம் அங்கே மொத்தமாக நின்றுவிட்டது
பாஜக ஆளும் மாநிலங்களில் நிலைமை ரொம்ப மோசமாம்...அதே மாநிலங்களை காங்கிரஸ் ஆட்சி செய்த போது அங்கே அப்படியே பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடியது ....அதெல்லாம் இப்பொது அங்கே அப்படியே நின்று போனது ....
அதனால் தானே பாவக்காவை கொண்டாந்தாங்க. இப்ப வெக்கமே இல்லாம காங்கிரஸ் பின்னாடி ஒளிஞ்சிக்கிறியே.
அதனாலதானே விடியலை கொண்டு வந்தாங்க.....இப்ப வெட்கமே இல்லாமல் விடியல் எதுக்கு வடக்கனை பாரு என்று ஒளிஞ்சிக்கணும் ....
ரோடு ஷோ முருகன் நடத்தி இருந்தால் கூடுதல் ஓட்டுக்கள் வாங்கி இருக்கலாம்மேலும்
-
2021 தேர்தலை விட கூடுதலாக ஓட்டளித்தோர் 20 லட்சம் பேர்!
-
பழங்குடியின பெண்கள் 'குடம் கவிழ்ப்பு' போராட்டம்
-
ஓட்டுப்பதிவால் வனத்துறை சுற்றுலா தலங்கள் மூடல்
-
நீலகிரியில் விறு ,விறுப்பாக நடந்த தேர்தல்; 78.49 சதவீதம் ஓட்டு பதிவு
-
ஊஞ்சலாடிய போது விபரீதம் ;கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் பலி
-
ஓட்டளிக்க முடியவில்லை: வனத்துறையினர் ஏமாற்றம்