சைபர் கிரைம் மோசடியில் மேலும் ஒருவர் சிக்கினார்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சைபர் கிரைம் மோசடியில் ஏஜென்ட்களாக செயல்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில் மேலும் ஒருவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெற்ற பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றி வெளி நாடுகளுக்கு அனுப்பும் ஏஜென்ட்களாக செயல்பட்ட 3 பேரை சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் சிலர் இதில் ஏஜென்ட்களாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அதன்படி முதுகுளத்துார் பர்மா காலனி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் விக்னேஷ்வர் 23, வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். இதில் அவர் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனை விவரங்களை போலீசார் கைப்பற்றினர்.
மேலும், வீட்டில் இருந்து 33 அலைபேசிகள், 19 ஏ.டி.எம்., கார்டுகள், 49 வங்கி கணக்கு புத்தகங்கள், 29 சிம் கார்டுகள், ஒரு மடிக்கணினியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய விக்னேஷ்வரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மோசடி பணத்தை பெறுவதற்காக வங்கி கணக்கு விபரங்களை கமிஷனுக்கு வாங்கி கொடுக்கும் ஏஜென்டுகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
---
மேலும்
-
தேர்தல் விதிமுறை மீறல்: வேட்பாளர் மீது வழக்கு
-
கஞ்சா கடத்திய இருவர் கைது
-
வி.புதுப்பாளையம் கிராமத்தில்கோவில் கும்பாபிேஷக விழா
-
ஆஞ்சநேயர் கோவிலில் தெப்பல் உற்சவம்
-
திண்டிவனம் நகரத்தின் மூன்றாம் தலைமுறை பால்பாண்டியன் சூப்பர் ஸ்டோர் திறப்பு விழா
-
விழுப்புரம் மருதுார் ஏரியை புனரமைத்து படகு குழாமுடன் சுற்றுலாத்தளமாக்கப்படும்: தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் உறுதி