ஆஞ்சநேயர் கோவிலில் தெப்பல் உற்சவம்

விழுப்புரம்: லட்சதீப மகோற்வத்தைத் தொடர்ந்து விழுப்புரம் ஆஞ்சநேயசுவாமி கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது.

விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் 102வது ஆண்டு லட்சதீப மகோற்சவ விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 14ம் தேதி புத்தாண்டையொட்டி லட்சதீப விழா நடந்தது.

நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு சுவாமி வீதியுலாவாக கொண்டு செல்லப்பட்டு, நள்ளிரவு 12:00 மணிக்கு கோவில் தெப்பல் குளத்தில் ஆஞ்சநேயர், விநாயகர் சுவாமி வலம் வரும் தெப்பல் உற்சவம் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விடையாற்றி உற்சவம் நடந்தது.

Advertisement