டீ போட்டு கொடுத்து ஓட்டு சேகரித்த தே.மு.தி.க., வேட்பாளர்

திருத்தணி:தேனீர் கடைகளில் டீ போட்டு கொடுத்து, தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி நேற்று ஓட்டு சேகரித்தார்.

திருத்தணி தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் டி. கிருஷ்ணமூர்த்தி, திறந்த வேனில் சென்று நேற்று பிரசாரம் செய்தார். அதேபோல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் மற்றும் விவசாயிகள், நெசவாளர்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

திருத்தணி நகரத்தில் பிரசாரம் செய்த வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தேனீர் கடை களில் டீ போட்டு கொடுத்து ஓட்டு சேகரித்தார்.

இதில், திருத்தணி நகர தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி, நகர செயலர் வினோத்குமார், நகராட்சி துணை தலைவர் சாமிராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஓட்டு சேகரித்தனர்.

★★

Advertisement