இலங்கை அதிபருடன் துணை ஜனாதிபதி சிபிஆர் சந்திப்பு

7


கொழும்பு: அரசு முறை பயணமாக இலங்கை சென்ற துணை ஜனாதிபதி சிபிஆர், அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகா மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக, இன்று (ஏப்ரல் 19) இலங்கைக்கு சென்றார். அவருக்கு கொழும்பு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு சிபி ராதாகிருஷ்ணன் மேற்கொண்டுள்ள முதல் இலங்கை பயணம் இதுவாகும்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
கொழும்புவில் இலங்கை அதிபர் அனுரா திசநாயகா மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகளிடையேயான பன்முக உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, . திட்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இருதரப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மீனவர் பிரச்னைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசின் உதவியுடன் இலங்கைத் தமிழ் சமூகத்தினருக்காக புதிதாக வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூன்றாம் கட்ட பயனாளிகளுக்கான வீடுகளை ஒப்படைக்க உள்ளார். நாளை நுவரேலியாவுக்கு செல்லும் அவர், மத்திய அரசு உதவியுடன் அங்கு கட்டப்படும் வீடுகளை பார்வையிடுகிறார். அங்குள்ள தமிழ் சமூகத்துடன் கலந்துரையாட உள்ளார்.

துணை ஜனாதிபதி வருகை முன்னிட்டு, தங்கள் நாட்டு சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement