மகனை முதல்வராக்குவது தான் ஸ்டாலின் குறிக்கோள்: ஈரோடு ரோடு ஷோவில் அமித்ஷா பேச்சு

33


ஈரோடு: மகனை முதல்வராக்குவது தான் முதல்வர் ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் என ஈரோட்டில் ரோடு ஷோவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில் தெரிவித்தார்.


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பாஜ வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ நடத்தினார். அவர் சிவகிரி அரசு மருத்துவமனை முதல் தீரன் சின்னமலை சிலை வரை ரோடு ஷோவில் ஈடுப்பட்டார். அப்போது சாலையின் இருபுறமும் கூடியிருந்த பாஜவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாஜவினர் மத்தியில் அமித்ஷா ஹிந்தியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற முடியாமல் போனதற்கு திமுக, காங்கிரஸ் சதியே காரணம். நான் இதனை அனுமதிக்க மாட்டேன், நிச்சயம் நிறைவேற்றப்படும். பெண்களுக்கு உரிமையைக் கொடுக்க மகளிர் மசோதாவை கொண்டு வந்த போது திமுக அதை நிறைவேற்ற விடவில்லை.



அதிமுக உடன் இணைந்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் வெற்றிக் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. மகனை முதல்வராக்குவது தான் முதல்வர் ஸ்டாலினின் ஒரே குறிக்கோள். கருணாநிதி, பின் அவரது மகன் ஸ்டாலின் தற்போது அவரது மகன் என குடும்ப அரசியல் தொடர்கிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

ஈரோடு மொடக்குறிச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ; தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

லைவ் வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்

Advertisement