6 தலைப்புகளில் 20 அறிவிப்புகள்: சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
சென்னை: சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கையில் 6 தலைப்புகளில் 20 அறிவிப்புகள் இடம் பெற்று உள்ளன.
சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில் 'சென்னை சூப்பர்-6' திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். முக்கிய அறிவிப்புகள் விபரம் பின்வருமாறு:
* புதிதாக 1,000 மினி பஸ்கள் இயக்கப்படும்.
* மெட்ரோ விரிவாக்க பணிகள் 2028க்குள் நிறைவு செய்யப்படும்.
* சென்னையில் 2029க்குள் உலகத் தரம் வாய்ந்த எழில்மிகு சாலைகள் அமைக்கப்படும்.
* ஏஐ, அனிமேஷன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுக்கான மையம் அமைக்கப்படும்.
* உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு, உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஆராய்ச்சி மையம், அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* 20 ஆயிரம் உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* கால்நடை டாக்டர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும்.
* தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவுப்படுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.
* எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10க்கு மேற்பட்ட முக்கிய திட்டங்கள் 2027க்குள் முடிக்கப்படும்.
* மழை நீர் வடிகால்கள் 2028க்குள் முடிக்கப்படும்.
* பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027க்குள் முடிக்கப்படும்.
* நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.
* அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் அதி ஒளி தெரு விளக்குகள் அமைக்கப்படும்.
* கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவ உலகத்தரப் பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.
ஒவ்வரு தேர்தலிலும் பல அறிக்கைகள் வருகிறது. அதே அறிவிப்புகளை திரும்ப ஈயம் பூசி அடுத்த 5 வது வருடம் திரும்ப வருகிறது. எவன் படிக்கிறான் கேள்வி கேட்க? கேள்வி கேட்டாலும் இன்னொரு அறிக்கை வெளியிட்டு வாய் பூட்டு போடப்படும்.
பாலியல் குற்றவாளியான "யார் அந்த சார்" க்கு ஏன் சைதாப்பேட்டையில் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட்டது ?
திரு.கட்டத்தேவன் கட்டம் கட்டி திமுகவை பந்தாடி விட்டார். சிறப்பு.
கூடவே கூவத்தில் முதலை வளர்த்தால் அநியாய ஆகிரமிப்புகள் ஒழிக்கப்படுமே இதையும் சொல்லிட்டு ஒரு 1000 கோடியை ஆட்டைய போடலாமே
உமக்கும் எங்கள் தாய்மொழியான தமிழுக்கும் என்ன சம்பந்தம்?
மழைநீர் வடிகால் திட்டத்தை 4000 கோடியில் அமைப்போம் என்பதை மறந்து விட்டீர்கள் தாத்தா
நைனாவுக்கு கோவம் வரும்யா
எந்த ப்ராஜக்ட்டா இருந்தாலும், பணம் அடிச்சுடுவோமே... அதுக்காகத்தான் ப்ராஜக்ட்... புரியுதா?
எனக்கு விபரம் தெரிந்தது முதல் எங்கள் வீட்டில் அண்ணா
போட்டோவும் கருணாநிதி போட்டோவும் வரிசையாக மாட்டியிருக்கும். என் தாத்தா திமுக கட்சியின் உறுப்பினர். அதனால் என் அப்பாவும் திமுக கட்சியின் கடும் விசுவாசியாக இருந்தார் அதனால் நானும் திமுகவால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியின் ஆதரவாளனாக இருந்தேன். ஆனால் திமுகவின் இந்த ஐந்து வருட ஆட்சியில் நடந்த அராஜககங்களை பார்த்து என் அப்பா வேதனையடைந்து அவருடைய திமுக உறுப்பினர் அட்டையை தீயில் வைத்து எரித்து விட்டார். நானும் அவரைப் போலவே திமுகவின் ஐந்து வருடங்களின் கொடுங்கோலாட்சியை கண்டு மனம் நொந்து போய் அக்கட்சியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல்
என் வீட்டில் இருந்த திமுக தலைவர்களின் போட்டோவை சுக்கு நூறாக உடைத்து விட்டேன். இப்போதுதான் என் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது. திமுகவின் கடந்த ஐந்து வருட ஆட்சியில் நடந்த கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் சிலவற்றை மட்டும் சுருக்கமா பார்ப்போம்:
வேங்கைவயல் சம்பவம், ஆம்ஸ்ட்ராங் படுகொலை,
நீட் தேர்வு ரத்து என கூறி நம்மை ஏமாற்றியது,
கல்விக் கடன் தள்ளுபடி என கூறி ஏமாற்றியது, விவசாய கடன் தள்ளுபடி என கூறி ஏமாற்றியது, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு,
திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் கடத்தியது, மின்சார கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வு, அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன் குற்றத்தை மறைத்தது, கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணம், அம்மா உணவகத்தை மூடியது, சென்னை வெள்ளத்தில் 4000 கோடியை திருடியது, பொங்கல் பரிசு தொகுப்பில் ஒழுகும் வெல்லம் என்று ஊழல் பண்ணியது,
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ஊழல் செய்து மேயரை மாற்றியது. திருப்புவனம் அஜீத்குமாரை அடித்துக் கொன்றது, ரெட் ஜெயின்ட் மூவி மட்டுமே வெளியிடும் சினிமா, ரயிலில் கஞ்சா போதையில் திருத்தணியில் வடமாநில இளைஞரை வெட்டிய சிறுவர்களை தண்டிக்காமல் வெளியே விட்டது, Stalin பல வெளிநாடு வெற்று குடும்ப சுற்றுப்பயணம், இருபதுக்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்கள்,
சென்னையில் ஒரு நடிகைக்காக உதயநிதி நடத்திய தேவையில்லாத ஃபார்முலா கார் பந்தயம்,
டெல்டா பகுதியில் கோடவுன் கட்டாமல் விவசாயிகளின் நெல் மூட்டைகளை வீணாக மழையில் விட்டு வீணாக்கியது,கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் பெண் காவலருக்கே பாலியல் சீண்டல் பண்ணியது, கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டது,
திமுக கொடி பொருத்திய காரில் டோல் கேட்டில் டிக்கெட் எடுக்காமல் அராஜகம் செய்வது, பள்ளிக்குள் மாணவிகள் மது அருந்தியது, கே.என்.நேரு 2000 கோடி ரூபாய் ஊழல், சட்டப் பேரவையில் நேரலையை துண்டித்து, சேகர்பாபு இந்து பக்தரிடம் வம்பு செய்தது. இன்னும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இடம்தான் பத்தாது. கடைசியாக இதைப் படித்த பின்பும் வருகிற தேர்தலில் திமுகவிற்கு ஓட்டுப் போடும் இந்துக்கள் கண்டிபாக கருணாநிதி சொன்னது போல சோற்றால் அடித்த பிண்டங்களாகத்தான் இருக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் நண்பா
அருமை. இந்த பதிவை படிக்கும் எவரும் திமுக வுக்கு ஓட்டு போட மாட்டார்கள்
அருமை... அருமை. தில்லு முள்ளு திருட்டு தி மு க வுக்கு சம்மட்டியடி ...இதை படித்தாவது மக்கள் திருந்தி தி மு க வுக்கு ஒட்டு போட மாட்டார்கள் ...தி மு க இந்த தேர்தலோடு காணாமல் போவது உறுதியாகிவிட்டது
மனம் திருந்திய மைந்தன்.
நீங்க எப்பவோ சென்னையை
சிங்கப்பூரா மாற்றுவேன்னு சொன்னிங்க செஞ்சிங்களா
அந்தக் காலத்திலேயே அவருக்கு தலைப்பு பிடிக்கும்.மேலும்
-
ஊழலற்ற ஆட்சியை விஜய் தருவார்:P த.வெ.க., வேட்பாளர் பிரபாகர் பேச்சு
-
இருசக்கர வாகன அணிவகுப்பில் ஓட்டு சேகரித்தார் சிற்றரசு
-
அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா
-
தவறான சிகிச்சையால் இளம்பெண் இறப்பு? மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை!
-
சென்னை சூப்பர் லீக் கால்பந்து :பச்சையப்பாஸ் எப்.சி., அபாரம்
-
சீனியர் லீக் கால்பந்து போட்டி: சென்னை போலீஸ் அபாரம்