ரோடு புதுப்பித்தல் பணி :அதிகாரிகள் குழு ஆய்வு 

உடுமலை: தேசிய நெடுஞ்சாலைத்துறை புதுப்பிப்பு பணிகளை, நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

தேசிய நெடுஞ்சாலை எண், 209ல், அந்தியூர் முதல் மடத்துக்குளம் வரையிலான 22 கி.மீ., பகுதி நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருந்தது.

ரோட்டை புதுப்பிக்கும் வகையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை உடுமலை, மடத்துக்குளம் உட்கோட்டத்தின் வாயிலாக பணிகள் துவங்கியது.

குறிப்பிட்ட துாரத்துக்கு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு பிரிவு கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement